டெல்­லி­யில் தொடர்ந்து அதி­க­ரிக்­கும் கோடை வெயில்

டெல்­லி­யில் தொடர்ந்து அதி­க­ரிக்­கும் கோடை வெயில்

1 mins read
b24786ba-3a2d-4c24-a1e4-af0dfedcb0da
-

புது­டெல்லி: தலை­ந­கர் டெல்­லி­யில் கோடை வெயில் தகித்து வரு­கிறது. ெடல்­லி­யின் பல பகு­தி­களில் நேற்று 45 டிகிரி செல்­சி­ய­சுக்கு ேமல் வெப்­பம் பதி­வா­னது.

ெடல்லி நக­ரில், கடந்த இரண்டு நாட்­க­ளாக கடும் வெயில் அடிக்­கிறது. இத­னால் அனல் காற்று வீசு­கிறது. வட­மேற்கு டெல்­லி­யின் முகேஷ்­பு­ரி­யி­லும் தென்­மேற்கு டெல்­லி­யின் நஜப்­க­ரி­யி­லும் அதி­க­பட்­ச­மாக 47 டிகிரி வெப்­பம் பதி­வா­னது. அடுத்து வரும் நாள்­களில் வெப்­பம் மேலும் அதி­க­ரிக்­கும் என இந்­திய வானிலை மையம் தெரி­வித்­துள்­ளது.

டெல்லி தவிர பஞ்­சாப், உத்­த­ரப் பிர­தே­சம், ராஜஸ்­தான் உள்­ளிட்ட வட மாநி­லங்­களும் கடும் வெயி­லில் சிக்­கித் தவித்து வரு­கின்­றன.

டெல்­லி­யில் வெயில் சுட்­டெ­ரிப்­ப­தால் ஆரஞ்சு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்டு உள்­ளது. அதே­நே­ரத்­தில் கேர­ளா­வில் மிக அதிக கன­மழை பெய்­யும் என்­ப­தால் சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்டு உள்­ளது.

கடும் வெயில் கார­ண­மாக யமுனை ஆறு வறண்டு கிடப்­ப­தா­லும் ஹரி­யானா மாநி­லத்­துக்கு அனுப்­பிய கடி­தத்­துக்கு இது­வரை பதில் கிடைக்­கா­த­தா­லும் டெல்­லி­யின் பல பகு­தி­களில் குடிநீா் தேவையை பூா்த்தி செய்ய முடி­ய­வில்லை என்று அரசு அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இது­தொ­டா்­பாக பெயா் கூற விரும்­பாத அதி­காரி ஒருவா் கூறு­கை­யில், "நாங்­கள் தண்ணீா் விநி­யோ­கம் குறித்து நட­வ­டிக்கை எடுத்து வரு­கி­றோம். இருப்­பினும், ஹரி­யானா அரசு யமுனை ஆற்­றில் கூடு­தல் தண்­ணீரை விட­வில்லை எனில் நிலைமை மோச­மா­கி­வி­டும்," என்றார்.