ஆறு லட்சம் மாணவர்களுக்கு
இலவச மிதிவண்டிகள் விநிேயாகம்
சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பில் படித்துவரும் ஏறக்குறைய ஆறு லட்சம் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக மிதிவண்டிகள் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
618,101 மிதிவண்டிகளுக்கான விலையை இறுதி செய்யும் பணிகள் நடைெபற்று வருவதாகவும் மூன்று மாதங்களுக்குள் மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
சென்னையில் உலக மகளிர்
டென்னிஸ் போட்டிகள்
சென்னை: இந்தியாவில் முதல்முறையாக சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. பெண்கள் டென்னிஸ் சங்கம் சார்பில் நடத்தப்பட உள்ள இந்தப் போட்டிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2ஆம் ேததி வரை நடைபெற உள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் ெமய்யநாதன் அறிவித்துள்ளார். இப்போட்டியை நடத்துவதற்கு முதல்கட்டமாக ரூ.5 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
நடத்துநர் உயிரிழப்பு; பயணி கைது
மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூரில் அரசுப் பேருந்தின்
நடத்துநரை அடித்துக் கொன்ற பயணி கைது
செய்யப்பட்டார். விழுப்புரத்துக்கு சென்றுகொண்டிருந்த பேருந்தில் மதுபோதையுடன் பயணி ஒருவர் ஏறியுள்ளார். அவரிடம், டிக்கெட் எடுக்கும்படி நடத்துநர் பெருமாள் கூறியுள்ளார். மதுபோதையுடன் இருந்த ஆடவர், அதெல்லாம் முடியாது என வாக்குவாதம் செய்துள்ளார். இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், நடத்துநர் கொல்லப்பட்டார். நடத்துநர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பேருந்திலேயே நடத்துநர் கொல்லப்படும் வகையில் சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் பாழ்பட்டு கிடப்பதாக
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய பானை,
அணிகலன்கள் கண்டுபிடிப்பு
கீழடி: சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் எட்டாம் கட்ட அகழாய்வில் மிகப்பெரிய இரண்டு பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சுவர் பகுதியோடு இணைந்திருக்கும் பானைகளை முழுமையாக மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேேபால், வெம்பக்கோட்டை அகழாய்வில் யானையின் தந்தத்தால் செய்யப்பட்ட
அணிகலன்களும் டெரகோட்டா களிமண்ணால் செய்யப்பட்ட அணிகலன்கள் பாகமும் கிடைத்திருப்பதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ெதரிவித்துள்ளார்.
ஒடிசாவில் 30% மாணவர்கள்
பள்ளிக்கு வரவில்லை
புவனேஷ்வர்: ஒடிசாவில் கொரோனா தொற்று பாதிப்புக்குப் பிறகு 30 விழுக்காடு மாணவர்கள் பள்ளிகளுக்கு வரவில்லை என இம்மாநில அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் குறிப்பிட்டுள்ளது. பள்ளிக்கு வராத மாணவர்களின் வீடுகளுக்கு ஆசிரியர்களை அனுப்பி, அவர்கள் பள்ளிக்கு வராததற்கான காரணத்தை அறிந்து வரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு அளிக்கும் இலவச பள்ளிச் சீருடை, புத்தகம், மதிய உணவு போன்ற திட்டங்களை மாணவர்களுக்கு எடுத்துக் கூறி, அவா்களை மீண்டும் பள்ளிக்கு வர வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு முதல்வர் நவீன் பட்நாய்க் அறிவுறுத்தி உள்ளார்.
கழுதைப் பால் தயாரிப்பு;
சீனாவுக்கு ஏற்றுமதி
திருநெல்வேலி: தமிழகத்தின் முதல் கழுதைப் பண்ணையை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு திறந்து வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே 100 கழுதைகளுடன் கழுதைப் பால் பண்ணையை அமைத்துள்ளனர் திருநெல்வேலி பட்டதாரி இளைஞர்கள். வெளிநாடுகளில் கழுதைப் பால் நல்ல விலைக்கு விற்கப்படுவதால் இதனை சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளனர். ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.7,000 முதல் ரூ.10,000 வரை விற்பனையாகிறது. 50 மில்லி கழுதைப்பால் ரூ.500க்கு விற்கப்படுகிறது.

