திருவனந்தபுரம்: பழங்காலப் புராதனப் பொருள்கள் மோசடி வழக்கு தொடர்பில், மலையாள நடிகர் மோகன்லாலுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அடுத்த வாரம் விசாரணைக்கு நேரில் முன்னிலையாகும்படி அழைப்பு விடுத்துள்ளனர்.
கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்தவர் மோன்சன் மவுங்கால். ஆயுர்வேத மருத்துவரான இவர், தொல்லியல் பொருள் சேகரிப்பாளர். கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்துவிட்டதாக இவர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
பழங்காலப் பொருள்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவரான மோகன்லாலுக்கு, மோன்சன் மவுங்காலுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மோன்சன் மவுங்கால் பற்றி ேமாகன்லாலிடம் விசாரிக்க உள்ளனர்.

