மின்­தூக்கி விபத்து; மாண­வர் பலி

மின்­தூக்கி விபத்து; மாண­வர் பலி

1 mins read
381abe06-823a-4293-b357-a4aa91dc040e
-

கும்­மி­டிப்­பூண்டி: கும்­மி­டிப்­பூண்­டி­யில் திரு­மண மண்­ட­பத்­தில் மின்­தூக்கி அறுந்து விழுந்து சீத்­தல், 19, என்ற மாண­வர் உயி­ரி­ழந்­தார். இச்­சம்­ப­வம் தொடர்­பில், திரு­மண மண்­ட­பத்­தின் மேலா­ளர் உள்­பட மூவர் கைது செய்­யப்­பட்டு சிறை­யில் அடைக்­கப்­பட்­ட­னர்.

அதி­முக முன்­னாள் அமைச்­சர் ஜெயகு­மா­ரின் மகள் ஜெய்­பி­ரியா-மரு­ம­கன் நவீ­னுக்­குச் சொந்­த­மான திரு­மண மண்­ட­பத்­தில் நிகழ்ந்த விபத்­தில், பதி­னொன்­றாம் வகுப்­பில் படித்து வந்த மாண­வர் உயி­ரி­ழந்­தார்.

இந்­தச் சம்­ப­வத்தை ஒட்டி, ஜெய­கு­மா­ரின் மகள் தலை­ம­றை­வாகி விட்­ட­தாகத் தக­வல்.

திரு­மண மண்­ட­பத்­தில் உணவு பரி­மா­றும் வேலைக்­காக வந்த காஞ்­சி­பு­ரம் மாவட்­டம், வாலா­ஜா­பாத்­தைச் சேர்ந்த மாண­வன் சீத்­தல் உயி­ரி­ழந்­தார். ஜெய­ரா­மன் 23, விக்­னேஷ், 21, ஆகி­யோர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.