உக்ரேன் போரால் பாதிப்பு; சொந்த மாநிலத்தில் படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்கள்

உக்ரேன் போரால் பாதிப்பு; சொந்த மாநிலத்தில் படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்கள்

2 mins read
cbddb099-99db-447f-b586-7b0f8fc5677a
கோரிக்கையை வலியுறுத்தும் பதாகைகளுடன் மருத்துவ மாணவர்கள். படம்: தகவல் ஊடகம் -

சென்னை: உக்­ரே­னில் மருத்­து­வம் படிக்­கச் சென்­ற­வர்­கள் தங்­கள் சொந்த மாநி­லத்­தி­லேயே படிப்­பைத் தொடர உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என உக்­ரேன் எம்பிபிஎஸ் மாண­வர்­கள், பெற்­றோர் கூட்டமைப்பு வேண்­டு­கோள் விடுத்­துள்­ளது.

நேற்று சென்­னை­யில் நடை­பெற்ற இந்த கூட்­ட­மைப்­பின் ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் 600க்கும் மேற்­பட்ட மாண­வர்­களும் அவர்­க­ளின் பெற்­றோ­ரும் கலந்து கொண்­ட­னர்.

அதன் பின்­னர் செய்­தி­யா­ளர்­களி­டம் பேசிய கூட்­ட­மைப்­பின் நிர்­வா­கி­கள், போர் பதற்­றம் கார­ண­மாக உக்­ரே­னில் மருத்­து­வப் படிப்பு மேற்­கொண்­டி­ருந்த தமி­ழக மாண­வர்­கள் 1,896 பேர் தமி­ழ­கம் திரும்பி­உள்­ள­தா­கக் குறிப்­பிட்­ட­னர்.

உக்­ரேன், ரஷ்யா போர் கார­ண­மாக நாடு முழு­வ­தும் சுமார் 16 ஆயி­ரம் மாண­வர்­கள் பாதிக்­கப்­பட்டுள்­ள­தா­க­வும் அவர்­களில் சுமார் 4,000 பேர் இறு­தி­யாண்டு மாண­வர்­கள் என்­றும் சுட்­டிக்­காட்­டிய கூட்­ட­மைப்­பின் நிர்­வாகி­கள், அந்த 4,000 பேர் மட்­டும், இந்­தி­யா­வில் பயிற்சி (இன்­டர்ன்­ஷிப்) மேற்­கொள்ள மத்­திய அரசு அனு­மதி வழங்­கி­யுள்­ள­தா­கக் குறிப்­பிட்­ட­னர்.

"நாடு முழு­வ­தும் 600 மருத்­து­வக் கல்­லூ­ரி­கள் (தமி­ழ­கத்­தில் 67) உள்­ளன. ஒவ்­வொரு கல்­லூ­ரி­யி­லும் 27 இடங்­களை அதி­க­ரித்­தால் மீத­முள்ள 12 ஆயி­ரம் மாண­வர்­களுக்கு இடம் ­அ­ளிக்க முடி­யும்.

"புதி­தாக தொடங்­கப்­பட்ட கல்லூ­ரி­களில் முத­லாம் ஆண்டு மாண­வர் சேர்க்கை மட்­டுமே நடை­பெற்­றுள்­ளது.

"இந்­தக் கல்­லூ­ரி­களில் இரண்டு முதல் ஐந்து ஆண்டு வரை­யுள்ள மாண­வர்­க­ளைச் சேர்க்க முடி­யும். பல மாநி­ல­ அ­ர­சு­கள் தங்­கள் மாண­வர்­கள் இங்­கேயே படிப்பைத் தொடர நட­வ­டிக்கை எடுப்­ப­தா­க­வும் மத்­திய அரசு அனு­ம­திக்க வேண்­டும் என்­றும் தெரி­வித்­துள்­ளன.

"அத­னால், அந்­தந்த மாநி­லங்­களில் மாண­வர்­கள் படிப்பைத் தொடர மத்­திய அரசு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்," என உக்­ரேன் எம்­பி­பி­எஸ் மாண­வர்­கள், பெற்­றோர் கூட்­ட­மைப்­பின் நிர்­வா­கி­கள் கேட்டுக்கொண்­டுள்­ள­னர்.

இதற்­கி­டையே செய்­தி­யா­ளர்­களி­டம் பேசிய தமி­ழக மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன், உக்­ரேன் போலவே மருத்­து­வப் படிப்­புக்­கான பாடப்­பிரிவுகள் இருக்­கும் மற்ற நாடு­களில் மாண­வர்­கள் படிப்பைத் தொடர நட­வ­டிக்கை எடுக்க வேண்டு­ம் என்று மத்­திய அர­சுக்கு வேண்டு­கோள் விடுக்­கப்­பட்­டுள்­ளது என்றார்.

இந்த அடிப்­ப­டை­யில் போலந்து உள்­ளிட்ட ஆறு நாடு­களில் இந்திய மாண­வர்கள் படிப்பைத் தொடர நட­வ­டிக்கை எடுப்­ப­தாக மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது என்­றும் மாணவர்களின் நலன்களை தமிழக அரசு மனதிற்கொள்ளும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.