தமிழகம் வரும் பிரதமர்; நேரில் சந்தித்து மனு அளிக்கவுள்ள முதல்வர்

தமிழகம் வரும் பிரதமர்; நேரில் சந்தித்து மனு அளிக்கவுள்ள முதல்வர்

1 mins read
5f50317d-7b3e-4a3c-a537-9d328f0afe68
-

சென்னை: எதிர்­வ­ரும் 26ஆம் தேதி­அன்று பிர­த­மர் மோடி தமி­ழ­கத்­துக்கு வருகை தர உள்­ளார். அப்­போது பல்­வேறு புதிய திட்­டங்­க­ளுக்கு அவர் அடிக்கல் நாட்­டு­வார் என மத்­திய அரசு வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்­நி­லை­யில் தமி­ழ­கம் வரும் பிர­த­மரை, முதல்­வர் மு.க.ஸ்டா­லின் நேரில் சந்­திக்க உள்­ளார். அப்போது தமி­ழக அர­சின் கோரிக்­கை­கள் உள்­ள­டக்­கிய மனு ஒன்றை அவர் பிர­த­ம­ரி­டம் அளிக்க இருப்­ப­தா­கத் தெரி­கிறது.

பிர­த­மர் மோடி சென்­னை­யில் நடை­பெற உள்ள நிகழ்ச்­சி­யில் 12,413 கோடி ரூபாய் மதிப்­பி­லான திட்­டங்­க­ளுக்கு அடிக்­கல் நாட்­டு­கி­றார். தேசிய நெடுஞ்­சாலை அமைச்­சின் நிகழ்ச்சி சென்னை நேரு உள் விளை­யாட்டு அரங்­கில் நடை­பெ­றும். அதில் சென்­னை­யில் அமைக்­கப்­படும் நான்கு வழி விரைவுச்­சா­லை­யின் மூன்­றாம் கட்­டப் பணி உட்­பட மேலும் சில புதிய சாலை­களை அமைக்­கும் திட்­டங்­க­ளுக்கு அவர் அடிக்­கல் நாட்­டு­வார்.

மேலும், மத்­திய பெட்­ரோ­லிய-இயற்கை எரி­வா­யுத் துறை, ரயில்வே துறை­யின் சார்­பில் முடிக்­கப்­பட்­டுள்ள பணி­களை பிர­த­மர் நாட்­டுக்கு அர்ப்­ப­ணிக்­கி­றார்.

இதற்­கி­டையே, பிர­த­மரைச் சந்­திக்­கும்­போது இலங்­கைத் தமி­ழர் விவ­கா­ரம், நீட் தேர்வு ரத்து உள்­ளிட்ட பல்­வேறு கோரிக்­கை­களை முதல்­வர் மு.க.ஸ்டா­லின் வலி­யு­றுத்­து­வார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கடந்த ஜன­வரி மாதமே பிர­த­மர் மோடி தமி­ழ­கம் வர இருந்­தார். அப்­போது தமி­ழ­கத்­தில் புதி­தாக கட்­டப்­பட்­டுள்ள மருத்­து­வக் கல்லூரி­களை அவர் திறந்து வைப்பதாக இருந்­தது. எனி­னும் கொரோனா நெருக்­கடி கார­ண­மாக அவ­ரது பய­ணம் கைவி­டப்­பட்­டது.