சசிகலா: அதிமுகவைக் காப்பாற்றும் நேரம் வந்துவிட்டது

சசிகலா: அதிமுகவைக் காப்பாற்றும் நேரம் வந்துவிட்டது

1 mins read
49845ca2-8cef-46bc-97b4-8d1fcc3ade03
-

தஞ்சை: தொண்­டர்­க­ளின் தியா­கத்­தால் உயர்ந்த இயக்­க­மான அதி­மு­கவைக் காப்­பாற்­றும் நேரம் வந்­து­விட்­டது என சசி­கலா கூறி­ இ­ருப்­பது அக்­கட்சி வட்­டா­ரங்­களில் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

தாம் இருக்­கும் வரை அதிமுகவை யாரா­லும் அழித்­து­விட முடி­யாது என்று ஒரத்­த­நாடு பகு­தி­யில் நடை­பெற்ற திரு­மண நிகழ்­வில் கலந்­து­கொண்டு பேசி­ய­போது அவர் குறிப்­பிட்­டார்.

முன்­னாள் முதல்­வர் எம்ஜிஆரின் மறை­வுக்குப் பிறகு அதி­மு­க­வுக்கு சோதனை ஏற்­பட்­ட­தா­கக் குறிப்­பிட்ட அவர், ஜெய­ல­லிதா மறை­வுக்குப் பிறகு மீண்­டும் அதே­போன்ற சோதனை ஏற்­பட்­டுள்­ளது என்­றார்.

"அன்­றைக்கு எப்­படி அதி­முக மீண்­டெ­ழுந்­ததோ, அதே­போல் தற்­போ­தும் கட்சி புதுப்­பொ­லிவு பெற்று உன்­னத நிலையை அடை­யும். இந்த உன்­னத நிலையை அடைய நானே கார­ண­மா­வேன். அது­வரை நான் ஓய­மாட்­டேன்," என்று சசி­கலா ஆவே­ச­மா­கப் பேசி­னார்.

காலம் என்ற நியதி இல்­லா­மல் எந்­தச் செய­லும் நிறை­வே­று­வ­தில்லை என்று குறிப்­பிட்ட அவர், எதிர்­பார்த்த விளைச்­சல் கிடைக்க வேண்­டும் என்­றால் விதையை விதைத்து நீருற்றி சில காலம் பொறுமை காக்க வேண்­டும் என்­றார்.

"எதிர்­க்கட்­சி­யி­னர் எத்­தனை கணக்­கு­கள் போட்­டா­லும், நான் இருக்­கும் வரை இந்த இயக்­கத்தை யாரா­லும் அழித்துவிட­ மு­டி­யாது. அதி­முக எத்­த­னையோ சோத­னை­யான கால­கட்­டங்­களை எல்­லாம் கடந்துதான் வந்­துள்­ளது," என்­றார் சசி­கலா.