தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கொசு ஒழிப்புப் பணியில் 21,000 களப்பணியாளர்கள்

2 mins read
4346fc0c-6f8f-4edf-813b-f1535a51bfcf
மா.சுப்பிரமணியன். படம்: தகவல் ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தில் டெங்கி காய்ச்­சல் பரி­சோ­தனை மையங்­கள் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. மேலும் மாநி­லம் முழு­வ­தும் கொசு ஒழிப்­புப் பணி­யில் 21 ஆயி­ரம் களப் ­ப­ணி­யா­ளர்­கள் ஈடு­பட்­டுள்­ள­னர்.

இத்­த­க­வலை தமி­ழக மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் செய்­தி­யா­ளர்­களி­டம் தெரி­வித்­தார்.

தேசிய டெங்கி நோய் தடுப்பு தினத்­தை­யொட்டி நேற்று முன்­

தி­னம் சென்­னை­யில் உள்ள ஓமந்­தூ­ரார் அரசு பன்­னோக்கு சிறப்பு மருத்­து­வ­ம­னை­யில், விழிப்­பு­ணர்வு கண்­காட்சி நடை­பெற்­றது.

அதைப் பார்­வை­யிட்ட அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­ய­னும் இந்து சமய அற­நி­லை­யத்­துறை அமைச்­சர் சேகர்­பா­பு­வும் டெங்கி கொசு ஒழிப்­புப் பணிக்கு புகைத்­தெ­ளிப்­பான் இயந்­தி­ரங்­க­ளு­டன் கூடிய வாக­னங்­க­ளின் பயன்­பாட்டை கொடி­ய­சைத்து தொடங்கி வைத்­த­னர்.

இதை­ய­டுத்து செய்­தி­யா­ளர்­

க­ளி­டம் பேசிய அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன், தமி­ழ­கம் முழு­வ­தும் டெங்கி தடுப்பு நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டுள்ள 21 ஆயி­ரம் களப்­பணி­யா­ளர்­கள் வீடு வீடா­கச் சென்று கொசு ஒழிப்­புப் பணி­களை மேற்­கொண்டு வரு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

இதற்­காக வாக­னத்­தில் பொருத்­தப்­பட்ட 1,112 புகை அடிப்­பான்­கள், கையில் எடுத்­துச்­செல்­லும் 7,087 புகை அடிப்­பான்­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், 7,654 சிறிய புகை அடிப்­பான்­களும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­கக் கூறி­னார்.

மேலும் கொசு ஒழிப்பு மருந்­து­கள் போதிய அளவு கையி­ருப்­பில் உள்­ள­தை­யும் அவர் உறுதி செய்­தார்.

"காய்ச்­சல் கண்­ட­றி­யப்­பட்ட இடங்­களில் சிறப்பு மருத்­துவ முகாம்­கள் நடத்­தப்­பட்டு, நட­மா­டும் மருத்­து­வக் குழுக்­கள் அந்­தப் பகுதிக்கு உட­ன­டி­யா­கச் சென்று பொது­மக்­க­ளுக்­குச் சிகிச்சை அளித்து வரு­கின்­றன. 'எலிசா' முறை­யில் டெங்கி காய்ச்­ச­லைக் கண்­ட­றி­யும் பரி­சோ­தனை மையங்­க­ளின் எண்­ணிக்கை 125ஆக உயர்த்­தப்­பட்­டுள்­ளது," என்­றார் மா.சுப்­பி­ர­ம­ணி­யன்.

சுகா­தா­ரத்­து­றை­யும் உள்­ளாட்சி அமைப்­பு­களும் பல்­வேறு துறை­

க­ளு­டன் ஒருங்­கி­ணைந்து கொசு ஒழிப்பு, விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­து­தல், காய்ச்­சல் கண்­ட­றி­தல் நட­வடிக்­கை­களை மேற்­கொண்டு வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட அமைச்­சர், தொடர்ந்து நடத்­தப்­படும் மருத்­துவ முகாம்­கள் மூலம் தமி­ழ­கத்­தில் தொற்று நோய்­கள் முழு­மை­யா­கக் கட்­டுப்­ப­டுத்­தப்பட்­டுள்­ள­தா­கத் தெரி­வித்­தார்.

கடந்த ஐந்து மாதங்­களில் மட்­டும் டெங்கி காய்ச்­ச­லைக் கண்­ட­றி­வ­தற்கு 66,747 பேருக்கு பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­கக் குறிப்­பிட்ட அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன், இது­வரை 2,485 பேருக்கு காய்ச்­சல் இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது என்­றார்.

உரிய நேரத்­தில் காய்ச்­சல் கண்­ட­றி­யப்­ப­டு­வ­தால் மாநி­லத்­தில் டெங்­கி காய்ச்­ச­லுக்­குப் பலி­யா­வது தவிர்க்­கப்­பட்­டுள்­ளது என்­றும் நடப்­பாண்­டில் டெங்கி மர­ணம் ஏதும் இது­வரை பதி­வா­க­வில்லை என்­றும் அவர் மேலும் தெரி­வித்­தார்.