சாலையில் தங்கி, உணவின்றி தவிக்கும் உக்ரேன் பேராசிரியர்

சாலையில் தங்கி, உணவின்றி தவிக்கும் உக்ரேன் பேராசிரியர்

1 mins read
c26d6a7b-61cf-4e68-808f-26de5e29238e
முன்னாள் பேராசிரியர் ஜெர்சி. படம்: ஊடகம் -

விழுப்­பு­ரம்: கடப்­பி­தழ் உள்­ளிட்ட ஆவ­ணங்­களை யாரோ திரு­டிச் சென்­று­விட்ட நிலை­யில், உக்ரே னைச் சேர்ந்த பேரா­சி­ரி­யர் ஒருவர் கடந்த பத்து நாள்­க­ளாக உணவு, உத­வி இன்றி தவித்து வரு­கி­றார்.

உக்­ரே­னைச் சேர்ந்த ஜெர்சி என்­ப­வர் கடந்த 1985 முதல் 1989 வரை அண்ணா பல்­க­லைக்­க­ழ­கத்­தில் வெளி­நாட்டு மொழித் துறை­யில் ரஷ்ய மொழி பயிற்­று­விக்­கும் பேரா­சி­ரி­ய­ராகப் பணி­யாற்­றி­னார்.

பின்­னர் புதுவை ஆரோ­வில் அனைத்­து­லக நக­ரில் வசித்து வந்­துள்­ளார். இந்­நி­லை­யில் கடந்த மாதம் பெங்­க­ளூரு சென்­று­விட்டு சென்னை திரும்­பும்­போது இவ­ரது கடப்­பி­தழ் உள்­ளிட்ட பல்­வேறு முக்­கிய ஆவ­ணங்­கள் வைக்­கப்­பட்­டி­ருந்த பையை யாரோ திரு­டி­விட்­ட­னர். இது­கு­றித்து அவர் காவல்­

து­றை­யில் புகார் அளித்­துள்­ளார். எனி­னும் கடப்­பி­தழ் இன்­னும் கிடைக்­க­வில்லை.

இந்­நி­லை­யில் கடந்த பத்து நாள்­க­ளாக கையில் பணம் இன்றி, தங்­கு­வ­தற்கு இட­மும் இன்றி தவிப்­புக்கு ஆளாகி உள்­ளார் ஜெர்சி.

இதை­ய­டுத்து, பொது இடங்­களில் தங்கி நாள்­க­ளைக் கடத்தி வரும் அவர், "உக்ரேனைச் சேர்ந்த முன்­னாள் பேரா­சி­ரி­ய­ருக்கு உத­வுங்­கள்," எனும் வாச­கம் அடங்­கிய தக­வல் பல­கையை கையில் ஏந்­தி­ய­படி உத­விக்­காக காத்­தி­ருக்­கி­றார்.

கடந்த பத்து நாள்­க­ளாக அவர் குடி­நீ­ருக்­குக்கூட வழி­யின்றி, பட்­டி­னி­யு­டன் தவித்து வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அவ­ருக்கு காவல்­து­றை­யும் விழுப்­பு­ரம் மாவட்ட ஆட்­சி­ய­ரும் உதவி செய்து, தாய் நாட்­டுக்கு அனுப்பி வைக்க வேண்­டும் என சமூக ஆர்­வ­லர்­கள் வலி­யு­றுத்தி உள்­ள­னர்.