தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரிய வகை விலங்குகள் சென்னையில் பறிமுதல்

தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரிய வகை விலங்குகள் சென்னையில் பறிமுதல்

1 mins read
1607d48a-a7e3-460d-bdc8-b2ca55732154
பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகள். படம்: ஊடகம் -

சென்னை: தாய்­லாந்­தில் இருந்து கடத்தி வரப்­பட்ட அரி­ய­வகை குரங்கு, முள்­ளம்­பன்றி உள்­ளிட்ட விலங்­கு­கள் சென்னை விமான நிலை­யத்­தில் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

பயணி ஒரு­வர் அவற்றை அட்­டைப்­பெட்­டி­யி­லும் துணி­யால் செய்­யப்­பட்ட கூடைக்­குள்­ளும் மறைத்து வைத்து கொண்டு வந்­துள்­ளார்.

திங்­கட்­கி­ழமை அதி­காலை தாய்­லாந்து தலை­ந­கர் பேங்­காக்­கில் இருந்து சென்னை வந்­த­டைந்த விமா­னத்­தில் பய­ணம் மேற்­கொண்ட அனை­வ­ரும் சுங்­கப் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

அப்­போது சென்­னை­யைச் சேர்ந்த ஆட­வர் ஒரு­வர் மீது அதி­கா­ரி­க­ளுக்கு சந்­தே­கம் எழுந்­தது. அவ­ரது உடை­மை­க­ளைச் சோத­னை­யிட்­ட­போது, ஓர் அட்­டைப் பெட்­டி­யி­லும் துணி­யால் செய்­யப்­பட்ட கூடைக்­குள்­ளும் வெள்ளை நிற முள்­ளம்­பன்றி, டாம­ரின் மங்கி எனப்­படும் அரிய வகை வெளி­நாட்டு குரங்குக் குட்­டி­யை­யும் அவர் மறைத்து வைத்­தி­ருந்­தது தெரி­ய­வந்­தது.

விலங்­கு­களை விமா­னத்­தில் கொண்டு வரு­வ­தற்கு முறை­யாக அனு­மதி பெறாத நிலை­யில், அதி­கா­ரி­கள் கேட்ட கேள்­வி­க­ளுக்­கும் அந்த ஆட­வர் முன்­னுக்­குப்­பின் முர­ணா­கப் பதி­ல­ளித்­தார்.

இதை­ய­டுத்து, அந்த விலங்­கு­

க­ளைப் பறி­மு­தல் செய்த அதி­கா­ரி­கள், மத்­திய வன விலங்கு பாது­காப்பு குற்­றப்­பி­ரி­வுக்கு தக­வல் தெரி­வித்­த­னர். அந்த விலங்­கு­கள் மீண்­டும் தாய்­லாந்­துக்கே திருப்பி அனுப்­பப்­பட வாய்ப்பு உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.