சசிகலா: அதிமுகவில் இணைவது உறுதி

சசிகலா: அதிமுகவில் இணைவது உறுதி

2 mins read
b4cf0366-6535-4c30-9f27-ce60db7d35ef
சசிகலா. படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தில் மீண்­டும் அதி­முக ஆட்சி அமை­யும் என்­றும் அது மக்­கள் ஆட்­சி­யாக விளங்­கும் என்­றும் சசி­கலா தெரி­வித்­துள்­ளார்.

சிவ­கங்­கை­யில் செய்­தி­யாளர்­க­ளி­டம் பேசிய அவர், தாம் அதி­மு­க­வில் இணை­வது உறுதி என்­றார்.

சொத்­துக்­கு­விப்பு வழக்­கில் சிறை­வா­சம் அனு­ப­வித்து விடு­தலை­யான பின்­னர் சசி­கலா தீவிர அர­சி­ய­லில் ஈடு­ப­டு­வார் என எதிர்­பார்க்­கப்­பட்­டது.

எனி­னும், அவ்­வப்­போது பர­ப­ரப்பு ஏற்­ப­டுத்­தும் வித­மாக சில அறி­விப்­பு­களை வெளி­யிட்டு வரும் அவர், இன்­னும் ஆன்­மீ­கச் சுற்­றுப்­ப­ய­ணத்­தில்­தான் உள்­ளார்.

சசி­க­லாவை அதி­மு­க­வில் மீண்­டும் இணைத்­துக்­கொள்ள வாய்ப்பே இல்லை என அக்­கட்­சித் தலைமை தொடர்ந்து திட்­ட­வட்­ட­மாக கூறி வரு­கிறது.

இந்­நி­லை­யில், தாம் அதி­மு­க­வில் இணை­யப்­போ­வது நிச்­ச­யம் என சசி­கலா தெரி­வித்­துள்­ளார்.

திமுக ஆட்­சி­யில் தமி­ழக மக்­கள் சிர­மங்­களை அனு­ப­வித்து வரு­வ­தாகக் குறிப்­பிட்ட அவர், ஓராண்டு பல்­வேறு சாத­னை­க­ளைப் புரிந்­துள்­ள­தாக திமு­க­வி­னர்­தான் சொல்லி வரு­கி­றார்­களே தவிர, மக்­கள் அப்படி நினைக்கவில்லை என்­றார்.

"தேர்­த­லுக்கு முன்பு திமுக ஐநூ­றுக்­கும் மேற்­பட்ட வாக்­கு­று­தி­களை அளித்­தது. அவற்­றுள் ஒன்­றைக்­கூட நிறை­வேற்­ற­வில்லை. பல­வற்­றைச் சொல்­கி­றார்­களே தவிர, செயல்­பாட்­ட­ள­வில் ஒன்­றும் செய்­ய­வில்லை.

"முன்னாள் மத்திய நிதி அமைச்சர் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி இருப்பது குறித்து கருத்து தெரிவிக்க ஒன்றும் இல்லை. மத்திய அரசு இப்போது மாநில அரசை நசுக்குவதாக ஒரு புகார் கூறப்படுகிறது.

"முன்பு அதி­முக ஆட்­சி­யின்­போது மத்­தி­யில் வேறு அரசு இருந்­தது. ஆனால், அன்­றைய முதல்­வர் ஜெய­ல­லிதா இது­போன்று குறை­கூ­ற­வில்லை. தமி­ழக மக்­க­ளுக்கு என்ன தேவை என்­பதை உணர்ந்து மத்­திய அர­சி­டம் தீவி­ர­மாக கேட்­டுப் பெற்­றுக் கொடுத்­தார். இன்­றைய திமுக அர­சும் அப்­ப­டித்­தான் செயல்­பட வேண்­டும்," என்­றார் சசி­கலா.

மத்­திய அர­சைக் குறை­கூ­று­வது மட்­டுமே மாநில அர­சின் வேலை அல்ல என்று குறிப்­பிட்ட அவர், திமுக ஆட்­சிப் பொறுப்­பேற்று ஓராண்டு நிறை­வ­டைந்த நிலை­யில், மத்­திய அரசை குறை கூறு­வ­தி­லேயே நாள்­க­ளைக் கடத்­தக்­கூ­டாது என்­றார்.

'திமுக அரசு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை'