தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 12 பேர் பலி

தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 12 பேர் பலி

1 mins read
584797ef-37c4-4271-baf6-645d9d62fe7c
தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்த பகுதி. படம்: ஊடகம் -

அக­ம­தாபாத்: உப்பு தொழிற்­சா­லை­யில் சுவர் இடிந்­து­வி­ழுந்த விபத்­தில் 14 வய­துச் சிறுமி உட்­பட 12 தொழி­லா­ளர்­கள் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­த­னர். இத்­து­ய­ரச் சம்­ப­வம் குஜ­ராத் மாநி­லம் மார்பி மாவட்­டத்­தில் நேற்று மதி­யம் நிகழ்ந்­தது.

அச்­ச­ம­யம் சுமார் 30 தொழி­லா­ளர்­கள் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். அப்­போது யாரும் எதிர்­பா­ராத வித­மாக தொழிற்­சா­லைக்­குள் பெரிய சுவர் ஒன்று இடிந்து விழுந்­தது. அதன் இடி­பா­டு­களில் பலர் சிக்­கிக்­கொண்­ட­னர்.

"நான்­கைந்து பேர் அந்த இடத்­தி­லேயே உடல் நசுங்கி உயி­ரி­ழந்­த­னர். காய­ம­டைந்த சிலர் உதவி கேட்­டும் மேலும் சிலர் இறந்­த­வர்­க­ளைக் கண்ட அதிர்ச்­சி­யி­லும் கூக்­கு­ரல் எழுப்­பி­னர்.

"சுவர் இடிந்­த­தால் ஏற்­பட்ட புழு­திப்­ப­ட­லம் கார­ண­மாக சில நிமி­டங்­க­ளுக்கு எது­வும் கண்­க­ளுக்­குப் புலப்­ப­ட­வில்லை," என்று விபத்தை நேரில் கண்ட ஒரு­வர் தெரி­வித்­தார்.

விபத்து குறித்து தக­வ­ல­றிந்து விரைந்து வந்த தீய­ணைப்பு, மீட்­புத்­து­றை­யி­னர் 12 பேரின் உடல்­க­ளை­யும் படு­கா­ய­ம­டைந்த ஒரு­வ­ரை­யும் மீட்­ட­னர்.

பலி­யா­ன­வர்­க­ளின் குடும்­ப­ங்­க­ளுக்கு குஜ­ராத் அரசு ரூ.4 லட்­சம் இழப்­பீடு அறி­வித்­துள்­ளது.