வாயில் வெள்ளைத்துணி கட்டி எதிர்ப்பை பதிவு செய்தனர் பேரறிவாளன் விடுதலை: காங்கிரசார் போராட்டம்

வாயில் வெள்ளைத்துணி கட்டி எதிர்ப்பை பதிவு செய்தனர் பேரறிவாளன் விடுதலை: காங்கிரசார் போராட்டம்

2 mins read
fb2c5d9a-e6e3-408d-b1dc-c882e567ceb2
தமிழக காங்கிரஸ் தலைமையகத்தின் முன்பு அக்கட்சியினர் நேற்று அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: பேர­றி­வா­ளன் விடு­த­லை­யைக் கண்­டித்து, தமி­ழக காங்­கி­ரஸ் சார்­பில் மாநி­லம் தழு­விய அள­வில் நேற்று போராட்­டம் நடை­பெற்­றது.

அப்­போது காங்­கி­ர­சார் வாயில் வெள்­ளைத்­துணி கட்டி தங்­கள் எதிர்ப்பை பதிவு செய்­த­னர்.

முன்­னாள் பிர­த­மர் ராஜீவ்­காந்தி கொலை வழக்­கில் தண்­டனை பெற்று, 31 ஆண்­டு­கள் சிறை­வா­சம் அனு­ப­வித்து வந்த பேர­றி­வா­ளனை உச்ச நீதி­மன்­றம் நேற்று முன்­தி­னம் விடு­தலை செய்­தது.

இதை­ய­டுத்து, மாநி­லம் தழு­விய அள­வில் போராட்­டம் நடத்­தப்­படும் என தமி­ழக காங்­கி­ரஸ் தலை­வர் கே.எஸ்.அழ­கிரி அறி­வித்­தி­ருந்­தார். அதன்­படி, நேற்று காங்­கி­ர­சார் தங்­கள் வாயில் வெள்­ளைத்­துணி கட்டி மௌனப் போராட்­டத்­தில் ஈடு­பட்டனர்.

மேலும், 'வன்­மு­றையை எதிர்ப்­போம்', 'கருத்து வேறு­பா­டு­க­ளுக்கு கொலை செய்­வது தீர்­வா­காது' என்ற வாச­கங்­கள் கொண்ட பதா­கை­களை ஏந்தி இருந்­த­னர்.

சிதம்­ப­ரத்­தில் நடை­பெற்ற போராட்­டத்­தில் கலந்­து­கொண்ட கே.எஸ்.அழ­கிரி, செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசு­கை­யில், பேர­றி­வா­ளன் அளித்த மனு மீது தமி­ழக ஆளு­நர் முடி­வெ­டுக்க தாம­தம் செய்த கார­ணத்­தி­னா­லேயே அவர் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார் என்­றும் அவர் குற்­ற­வாளி அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்­ப­ளிக்­க­வில்லை என்­றும் சுட்­டிக்­காட்­டி­னார்.

"ராஜீவ் காந்­தி­யோடு சேர்த்து ஒன்­பது காவல்­து­றை­யி­னர் உள்­ளிட்ட 17 பேர் கொலை செய்­யப்­பட்­ட­னர். அவர்­க­ளுக்­கும் குடும்­பம் இருக்­கிறது. தலை­வர் ராஜீவ் காந்­திக்­கும் குடும்­பம் இருக்­கிறது.

"பேர­றி­வா­ள­னின் தாயார் அற்­பு­தம் அம்­மா­ளின் மன­நி­லையை நான் நன்கு அறி­வேன்.

"அதே போன்று அனை­வ­ருக்­கும் தாய், மனைவி, குழந்­தை­கள் உள்­ள­னர். அவர்­களுடைய மன­நிலையையும் நாம் பார்க்க வேண்­டும். சமூ­கம் இதை ஏற்­றுக்­கொள்­ளுமா? கன்­றுக்­குட்டி மீது தேரை ஏற்­றி­யது தவறு எனக் கூறி தனது மக­னையே தேர்க்­கா­லில் இட்­டுக் கொன்ற மனு­நீ­திச் சோழன் வாழ்ந்த பூமி இது," என்­றார் கே.எஸ்.அழ­கிரி.

நீதி­மன்­றத்­தின் தீர்ப்பு குறித்து விமர்­சிக்க விரும்­ப­வில்லை என்று குறிப்­பிட்ட அவர், சமூக ஒழுங்கு, கட்­டுப்­பாடு என்­பது கேள்­விக்­கு­றி­யாகி உள்­ளது என்­றார்.

நேற்று மதுரை தல்­லா­கு­ளம், ஈரோடு மாவட்­டம் பெருந்­துறை பேருந்து நிலை­யம், நாமக்­கல் பூங்கா சாலை என மாநி­லம் முழு­வ­தும் பல்­வேறு பகு­தி­களில் காங்­கி­ர­சார் அமை­திப் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

இதற்­கி­டையே, பேர­றி­வா­ளன் விடு­தலை செய்­யப்­பட்­டி­ருப்­பது மிகுந்த மன வலியை ஏற்­ப­டுத்தி உள்­ள­தாக காங்­கி­ரஸ் செய்­தித் தொடர்­பா­ளர் ரந்­தீப் சுர்­ஜே­வாலா தெரி­வித்­துள்­ளார்.

இந்த வழக்­கில் மத்­தி­யில் உள்ள பாஜக அரசு செய­லற்ற நிலை­யில் இருந்­ததே பேர­றி­வா­ளன் விடு­த­லைக்கு கார­ண­மாகி உள்­ளது என்று அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது சாடினார்.