விருதுநகர்: சமூக ஊடகங்களில் வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து அவதூறு பரப்பப்படுவதாக விருதுநகர் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக மாநிலத் தலைவர் வரதராஜன் இப்புகாரை அளித்தார். கோவையைச் சேர்ந்த பாரிசாலன் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட காணொளிகளை நீக்கவேண்டும் என்றும் வரதராஜன் கோரியுள்ளார்.

