ஐந்து மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு: 10மாவட்டங்களில் மழை

ஐந்து மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு: 10மாவட்டங்களில் மழை

2 mins read
e8983c62-3e39-4631-9368-09c9cc47ea3c
-

கட­லூர்: தமி­ழ­கத்­தில் ஐந்து மாவட்­டங்­க­ளுக்கு வெள்ள அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

சுட்­டெ­ரிக்­கும் கோடை வெயி­லுக்கு மத்­தி­யி­லும் மாநி­லத்­தின் பல்­வேறு பகு­தி­களில் நல்ல மழை­யும் பெய்து வரு­கிறது. இத­னால் சில ஆறு­களில் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டுள்­ளது.

கிருஷ்­ண­கிரி, தர்­ம­புரி, திரு­வண்­ணா­மலை, விழுப்­பு­ரம், கட­லூர் ஆகிய ஐந்து மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த தென்­பெண்ணை ஆற்­றின் கரை­யோர மக்­க­ளுக்கு நேற்று முன்­தி­னம் வெள்ள அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது.

கடந்த இரு தினங்­க­ளாக கேஆர்பி அணைக்கு நீர்­வ­ரத்து இரண்­டா­யி­ரம் கன அடி­யாக அதி­க­ரித்­துள்­ளது. அணை­யின் நீர்ப்­பி­டிப்பு பகு­தி­களில் கன­மழை பெய்து வரு­வதே இதற்­குக் கார­ணம்.

இதை­ய­டுத்து, அணை­யில் இருந்து வினா­டிக்கு 1,117 கன அடி நீர் திறக்­கப்­பட்­டுள்­ள­தால் கரை­யோர மக்­க­ளுக்கு ஐந்து மாவட்­டங்­களில் நிர்­வா­கம் சார்­பில் வெள்ள அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது.

இதற்­கி­டையே, குற்­றால அரு­வி­களில் நீர் வரத்து அதி­க­ரித்­துள்­ளது.

தென்­காசி மாவட்­டத்­தில் மேற்­குத் தொடர்ச்சி மலை­யை­யொட்­டிய பகு­தி­களில் கடந்த சில நாள்­க­ளாக மழை பெய்து வரு­வ­தால், அரு­விக்­கான நீர்­வரத்து அதி­க­ரித்­துள்­ளது. இத­னால் சுற்­று­லாப் பய­ணி­கள் மகிழ்ச்சி அடைந்­துள்­ள­னர்.

அதே­போல், ஒக்­கே­னக்­கல் பகு­தி­யி­லும் நல்ல மழை பெய்து வரு­வ­தால், அங்கு பரி­சல் ஓட்­ட­வும் குளிக்­க­வும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, தமி­ழ­கத்­தில் பத்து மாவட்­டங்­களில் நான்கு நாள்களுக்கு மழை பெய்­யும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கன்­னி­யா­கு­மரி, தென்­காசி, நீல­கிரி, கோயம்­புத்­தூர், திருப்­பூர், ஈரோடு, சேலம், கிருஷ்­ண­கிரி, தர்மபுரி, திருப்­பத்­தூர் மாவட்­டங்­களில் பல இடங்­களில் கன­ம­ழை­ பெய்ய வாய்ப்­புள்­ள­தாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றில் கூறி­உள்­ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கோவை மாவட்டம் வால்பாறையில் அதிகபட்சமாக 9 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் அம்மையம் தெரிவித்தது.