சென்னை: சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை, "உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது," என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "இவ்வளவு ஆண்டு காலம் சிறைத்தண்டனை அனுபவித்த பிறகு, அவரது நன்னடத்தை காரணமாக விடுதலை செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்
கிறோம்.
"அதற்காக அவர் நிரபராதி அல்ல, அவரும் குற்றவாளிதான். முன்னாள் பிரதமர் கொலையில் அவரது குற்றம் பலமுறை உறுதி செய்யப்பட்டுத்தான் தண்டனை வழங்கப்பட்டது.
"ஆனால், அவரை நிரபராதிபோல திமுக அரசு கொண்டாடுகிறது.
"முதல்வர், அமைச்சர்கள் அனை வரும், ஒரு நிரபராதியை விடுதலை செய்வது போல கொண்டாடுவது, பேசுவது எல்லாம் உண்மையில் முதல்வர் அரசியலைப்புச் சட்டத்தின் மீது சத்தியப் பிரமாணம் செய்துவிட்டுத்தான் ஆட்சி நடத்து
கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.
"பேரறிவாளன் விடுதலையைக் கொண்டாடி ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறார்கள்," என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை பேரறிவாளன் நேற்று முன்தினம் சந்தித்தார்.
தூக்குத் தண்டனையில் இருந்து தம்மை ஆயுள் தண்டனைக்கு மாற்றிய மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானியின் உழைப்பு, அதற்கு முழு பின்புலமாக இருந்த வைகோவின் பங்கு உள்ளிட்டவற்றை நினைவு கூர்ந்த பேரறிவாளன், வைகோவுக்கு நன்றி சொன்னார்.
சென்னை அண்ணாநகரில் உள்ள வைகோவின் வீட்டில் நேற்று முன்தினம் இந்தச் சந்திப்பு நிகழ்ந் தது.