கோடையில் வெள்ளப்பெருக்கு

கோடையில் வெள்ளப்பெருக்கு

2 mins read
d635e037-02f9-4ff6-9df1-781fb008d7d1
-

சென்னை: தமி­ழ­கத்­தில் அண்மை நாள்­க­ளாக கோடை மழை பெய்து வரு­கிறது. கர்­நா­ட­கா­வி­லும் கன­மழை நீடிப்­ப­தால் அங்­குள்ள பள்­ளி­க­ளுக்கு விடு­முறை விடப்­பட்­டுள்­ளது. கர்­நா­டகா அணை­க­ளி­லி­ருந்து கூடு­தல் தண்­ணீர் திறக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் காவி­ரிக் கரை­யோர மாவட்­டங்­க­ளுக்கு வெள்ள அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

மேட்­டூர் அணைக்கு நீர்­வ­ரத்து அதி­க­ரிக்­க­லாம் என்­ப­தால் போதிய முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என­வும் கிருஷ்­ ண­கிரி, தரு­ம­புரி, சேலம், ஈரோடு, நாமக்­கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகை ஆகிய 9 மாவட்ட ஆட்சி யர்கள் இதனைச் செய்யவேண்டும் எனவும் மத்­திய நீர்­வ­ளத்­துறை தெரிவித்துள்ளது.

மேலும், கேரளா, கர்­நா­ட­கா­வில் கன­ம­ழை­யால் நேற்று மேட்­டூர் அணையின் நீர்­வ­ரத்து 46,000 கன அடி­யாக உய­ர­லாம் என கூறி­யுள்­ளது.

காவிரி ஆற்­றில் நீர்­வ­ரத்து வினா­டிக்கு 500 கன அடி­யில் இருந்து படிப்­ப­டி­யாக உயர்ந்து வரு­கிறது. கடந்த ஒரு வார­மாக காவிரி நீர்ப்­பி­டிப்பு பகு­தி­யில் கோடை மழை பெய்து வரு­வ­தால் காவிரி ஆற்­றில் நீர்­வ­ரத்து அதி­க­ரித்து வினா­டிக்கு 5,000 கன அடி­யாக இருந்­தது.

பின்­னர் இந்த அளவு 7,500 கன அடி­யாக உயர்ந்­தது. இத­னைத் தொடர்ந்து தமி­ழக, கர்­நா­டக மாநி­லத்­தில் உள்ள காவிரி நீர்ப்­பி­டிப்பு பகு­தி­களில் கோடை மழை தீவி­ரம் அடைந்­த­தால், புதன்­கி­ழமை வினா­டிக்கு 30,000 கன அடி­யாக நீர்­

வ­ரத்து அதி­க­ரித்­தது.

தொடர்ந்து நீர்­வ­ரத்து அதி­

க­ரிப்­பால் ஒகே­னக்­கல் அருவியிலும் ஆற்றிலும் குளிக்­க­வும், பரி­சல் பய­ணம் செய்­ய­வும் சுற்­றுலாப் பய­ணி­

க­ளுக்கு மாவட்ட நிர்­வா­கம் தடை விதித்­தது.

தமி­ழக எல்­லை­யான பிலி­குண்­டு­லு­வுக்கு வினா­டிக்கு 50,000 கன அடி­யாக நீர்­வ­ரத்து உயர்ந்­தது.

இத­னால் ஒகே­னக்­கல் அரு­விக்குச் செல்­லும் நடை­மேடை, பிர­தான அரு­வி­கள் மற்­றும் பாறை­களை மூழ்­க­டித்து வெள்­ளம் பெருக்­கெ­டுத்து ஓடி­யது.

வரலாற்றில் கோடைகாலத்தில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

இதனால் காவிரி ஆற்றில் ஊட்ட மலை, ஆலம்பாடி, ஒகேனக்கல் போன்ற பகுதிகளில் காவல் துறை யினர், வருவாய்த் துறையினர், தீயணைப்புத் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொட்டித் தீர்த்த மழையால் காவிரி ஆற்றில் முதல்முறை நிகழ்ந்த அதிசயம்