இடம்பெயர்கிறது காந்தி சிலை

இடம்பெயர்கிறது காந்தி சிலை

1 mins read
95eb5c20-4536-470f-ae24-5dfe372e9879
1959ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் காமராஜர் முன்னிலையில் முன்னாள் பிரதமர் நேருவால் மெரினா கடற்கரையில் திறந்து வைக்கப்பட்ட மகாத்மா காந்தி சிலை. படம்: தமிழக ஊடகம் -

சென்னை: சென்னை கலங்­கரை விளக்­கத்­தில் இருந்து பூந்­த­மல்லி வரை 26 கிலோ­மீட்­டர் நீளத்­திற்கு மெட்ரோ திட்­டத்­தின் நான்­கா­வது வழித்­த­டம் அமைக்­கப்­பட உள்­ளது. அத்­து­டன் கலங்­கரை விளக்­கத்­தில் மெட்ரோ ரயில் நிலை­யம் ஒன்­றும் கட்­டப்­பட உள்­ளது.

இந்த ரயில் நிலை­யம் மெரினா கடற்­க­ரை­யில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே அமைக்­கப்­

ப­டு­கிறது. கட்­டு­மா­னப் பணி­க­ளின்­போது சேத­ம­டை­வ­தைத் தவிர்க்க காந்தி சிலையை தற்­கா­லி­க­மாக வேறு இடத்­திற்கு மாற்ற தமி­ழக அரசு முடிவு செய்­தது.

இது­கு­றித்து ஆய்வு செய்து அனு­ம­தி­ய­ளிக்க அரசு சார்­பில் சென்னை மாந­க­ராட்­சிக்கு கடி­தம் அனுப்­பப்­பட்­டது.

இந்­நி­லை­யில், மகாத்மா காந்தி சிலையை இட­மாற்­றம் செய்ய தடை­யில்லா சான்­றி­தழை தற்­போது சென்னை மாந­க­ராட்சி அளித்­துள்­ளது. காந்தி சிலையை மெட்ரோ ரயில் நிலை­யம் மற்­றும் சுரங்­கப்­பாதை பணி­கள் முடி­யும் வரை­யில் மாற்று இடத்­தில் வைக்­கும் பணி­களை பொதுப்­ப­ணித்­துறை மேற்­கொள்ள உள்­ளது. இதற்­கான இடத்­தைக் கண்­ட­றிய ஆய்வு செய்­யப்­பட்டு வரு­கிறது. மெட்ரோ பணி­கள் முடி­வுற்ற பின்­னர், பழைய இடத்­தி­லேயே மீண்­டும் சிலை வைக்­கப்­படும் என­ அதி­கா­ரி­கள் கூறி­னர்.