சென்னை: தமிழகத்தில் உள்ள ஐந்து ரயில் நிலையங்கள் உலகத் தரத்துக்கு மேம்படுத்தப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எழும்பூர், மதுரை, கன்னியாகுமரி, ராமேசுவரம், காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணி திட்டமிட்டபடி நடைபெறும் என்றார்.
"மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரயில்களுக்கான பெட்டிகள் சென்னை, பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன.
"சிறந்த பயண அனுபவம், மேம்பட்ட பாதுகாப்பு, அதிக பயணிகள் செல்லும் வசதி ஆகியவற்றில் இந்திய ரயில்வே கவனம் செலுத்தி வருகிறது," என்றார் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
இதற்காக, அனைத்து ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள ஐம்பது ரயில் நிலையங்கள் உலகத்தரத்துக்கு உயர்த்தப்பட உள்ளன என்றார்.
இதற்கிடையே, தமிழகத்தில் பணியாற்றும் அனைத்து ரயில்வே ஊழியர்களும் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தி உள்ளார்.
இதன் மூலம் பயணிகளுடனான நல்லுறவையும் ரயில் இயக்கத்தின் மேம்பாட்டையும் உறுதி செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

