ஆறு பேர் விடுதலை தொடர்பில் தமிழக முதல்வர் தீவிர ஆலோசனை

ஆறு பேர் விடுதலை தொடர்பில் தமிழக முதல்வர் தீவிர ஆலோசனை

2 mins read
9bd312c8-4c9b-4237-8cb1-0ba129ef2d78
-

கே.எஸ்.அழகிரி பேட்டியை அடுத்து கூட்டணியில் சலசலப்பு நிலவுவதாகத் தகவல்

சென்னை: பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில், ராஜீவ் கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் மற்ற ஆறு பேரை விடுதலை செய்வது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்ட வல்லுநர்களுடன் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அது தொடர்பான பரிந்துரை மீது முடிவெடுப்பதில் தமிழக ஆளுநர் தரப்பில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்தது.

இதையடுத்து சிறையில் உள்ள மற்ற ஆறு பேரையும் விடுவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் உதகையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொளி வசதி மூலம் ஆறு பேர் விடுதலை குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் மூத்த அமைச்சர்களும் தமிழக அரசின் அரசு தலைமை வழக்கறிஞரும் அரசு சார்பில் பங்கேற்றனர். மேலும், மூத்த வழக்கறிஞர்களும் கலந்து கொண்ட நிலையில், இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

இதற்­கி­டையே காஞ்­சி­பு­ரத்­தில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய தமிழக காங்­கி­ரஸ் தலை­வர் கே.எஸ்.அழகிரி, முன்­னாள் பிர­த­மர் ராஜீவ் காந்­தியை கொன்ற ஒரு­வர் விடு­தலை செய்­யப்­பட்­டி­ருப்­பதை திரு­வி­ழா­வாக கொண்­டா­டு­வதைப் பார்க்­கும்போது இத­யம் ரத்­தக் கண்­ணீர் வடிப்பதாகக் குறிப்­பிட்­டார்.

காங்­கி­ரஸ் தொண்­டர்­க­ளால் இதனை ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை என்­றும் குற்­ற­வாளி என நீதி­மன்­றத்­தால் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­ட­வர் எப்­போ­தும் குற்­ற­வா­ளி­தான் என்­றும் ஒரு­போ­தும் கட­வுள் ஆக முடி­யாது என்­றும் அழ­கிரி தெரி­வித்­தார்.

பேர­றி­வா­ளன் விடு­த­லையை திமு­க­வி­ன­ரும் அதி­மு­க­வி­ன­ரும்­தான் கொண்­டா­டு­கி­றார்­கள் என்­ப­தைச் சுட்­டிக்­காட்­டிய செய்­தி­யா­ளர்­கள், இதன் கார­ண­மாக திமுக கூட்­ட­ணி­யில் இருந்து காங்­கி­ரஸ் வில­குமா எனக் கேள்வி எழுப்­பி­னர்.

அதற்­குப் பதி­ல­ளித்த கே.எஸ்.அழ­கிரி, "கூட்­ட­ணிக் கட்­சி­க­ளின் நிலைப்­பாட்டை தெரிந்து கொண்டு­தானே நாங்­களும் கூட்­டணி வைத்­தோம். கூட்­டணி வேறு, கொள்கை வேறு. கூட்­டணி கட்சி­க­ளின் கொள்­கை­கள் வேறாக இருந்­தா­லும் கூட்­ட­ணிக்­கும் அதற்­கும் தொடர்பு இல்லை," என்­றார்.

பேரறிவாளன் விடுதலையை திமுகவினர் கொண்டாடி வருவது காங்கிரஸ் தலைமைக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆறு பேர் விடுதலை தொடர்பாகவும் தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது.