கொவிட்-19 பாதிப்புக்குப் பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து தென்னிந்தியாவில் மாபெரும் வேலைக் கண்காட்சி நடத்தப்பட்டது. சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் தனியார் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளும் திருநங்கைகளும் பங்கேற்றனர்.
இவர்களில் 1,600 பேர்
வேலைக்கான
பணியாணைகளைப் பெற்றனர்.
நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில், 160 நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், செவித்திறன்
குறைபாடு, பார்வைக் குறைபாடு, சரிவர நடக்கமுடியாதவர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
படம்: இபிஏ