திருப்பூர்: நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி தமிழக ஜவுளி உற்பத்தியாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வரும் ஜூன் மாதம் 5ஆம் ேததி வரை 15 நாள்களுக்கு இந்தப் போராட்டத்தை தொடர உள்ளதாகவும் ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பருத்திப் பஞ்சு, நூலின் விற் பனை விலை ஒரு சீரான நிலைக்கு வரும் வரை மாநிலம் முழுவதும் 400 நூற்பாலைகளில் உற்பத்தி நிறுத்தப்படுவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
அவர்களது இந்தப் போராட்டத் தால் ஒவ்வொரு நாளும் ரூ.500 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக் கப்படும் சூழல் நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.
அத்துடன், இரண்டு லட்சம் விசைத்தறிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், இதில் பணி யாற்றும் லட்சக்கணக்கான கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறி ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநிலத்தில் கடந்த ஐந்து மாதங்களாகவே பஞ்சு விலை உயர்வால், சிறுசிறு நூற்பாலைகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின.
கடந்த ஜனவரி மாதம் ரூ.328 ஆக இருந்த ஒரு கிலோ நூலின் விலை இப்போது ரூ.389 ஆக உள்ளது. இதைக் கணக்கிடும்போது சிறு நூற்பாலைகளுக்கு ஒரு கிலோவிற்கு ரூ.50 முதல் ரூ.60 வரை நஷ்டம் ஏற்படுகிறது.
இந்தப் பஞ்சு, நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அமைதியாக வேடிக்கைப் பார்த்து வருவதாகவும் ஜவுளி உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
"பருத்திப் பஞ்சு, நூலின் ஏற்றுமதிக்கு தடை விதித்து, இவற்றின் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும்," எனவும் மத்திய அரசுக்கு கோவை, திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத் தலைவர் ஜெ.செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பருத்திப் பருவம் ஆரம்பித்தவுடன் பெரிய பஞ்சு வியாபாரிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் அதிக அளவில் பஞ்சை கொள்முதல் செய்து இருப்பு வைத்துக்கொண்டனர். வெளிநாட்டிற்கு பஞ்சு ஏற்றுமதியும் செய்யப்பட்டது. இப்போது பஞ்சின் விலை கடுமையாக உயர்ந்துவிட்ட சூழலில், இதன் விலை சீராகும் வரை சிறு நூற்பாலைகளை இயக்க வேண்டாம் என முடிவு எடுத்துள்ளோம். இதனால் உற்பத்தி நிறுத்தப்படுகிறது," என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள 400 நூற்பாலை களில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், தினமும் ரூ.500 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்று நூற்பாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாக தின கரன் ஊடகத் தகவல் குறிப்பிட்டு உள்ளது.