திருச்சி: தமிழகத்தில் சிைறக் கூடத்தில் மரணம் என்பதே இனி நடக்கக் கூடாது. இந்த நிலையை உருவாக்குவதே காவல்துறையின் முக்கிய இலக்கு என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
காவல் நிலைய மரணங்களைத் தடுப்பது தொடர்பாக திருச்சியில் கருத்தரங்கம் நடைபெற்றது. அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு, "காவல்நிலையத்தில் காவலர்கள் தாக்கியதால் மட்டுமே குற்றவாளிகள் இறந்ததாகச் சொல்லமுடியாது. உடல்நிலை சரியில்லாமல்கூட சிலர் இறந்துவிடுகிறார்கள். சிலர் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். காவலர்கள் குற்றவாளிகளைக் கண்ணியமாகவும் பாதுகாப்பாகவும் நடத்த வேண்டும் என்பதற்குத்தான் இந்தக் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது," என்றார்.