புதுக்கோட்டை: 10 ரூபாய் எலுமிச்சம் பழத்தைப் பறக்கவிட்டு புதையல் எடுத்துத் தருவதாக 81,000 ரூபாயைப் பறித்துச் சென்ற மோசடிக் கும்பல் சிக்கியது.
மணி, முருகேசன், ராசு ஆகிய மூன்று போலிச் சாமியார்களைக் கைது செய்த காவலர்கள், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அவர்களிடம் இருந்து 23 பித்தளைச் சிலைகள், ரூ.81,000 ரொக்கம், இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. தனது குடும்பத்தில் உயிரிழப்பு, தொடர் பிரச்சினைகள் நிலவியதால் கடந்த பிப்ரவரி மாதத் தில் விராலிமலை அருகே வசித்து வரும் சாமியாடி ராசுவிடம் குறி கேட்கச் சென்றுள்ளார்.
அப்போது சாமியாடிக்கொண்டே குறி சொன்ன ராசு, வீட்டில் புதையல் உள்ளதாகவும் அதை எடுத்து வழிபட்டால் சிரமங்கள் அனைத்தும் நீங்கும் என்றும் கூறியுள்ளார்.
இதனை நம்பிய முத்துலட்சுமி குடும்பத்தினர், ஆங்காங்கே கடன் வாங்கி ரூ.75,000 கொடுத்து புதையலை எடுக்க ஏற்பாடுகளைச் செய்தனர். பூசை செலவுக்கும் ரூ.6,000 கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, ஓர் இரவு நேரத் தில் ராசுவின் நண்பர்களான மணி யும் முருகேசனும் புதையல் எடுப்பதற்கு முன்பு பூைசகள் செய்தனர்.
அப்போது, முகம் முழுவதையும் துணியால் மறைத்துக்கொண்டு எலுமிச்சம் பழத்தை அந்தரத்தில் பறக்கவிட்டும், பழத்தை மேலே கீழே என போகவைத்தும் தன்னை சக்தி வாய்ந்த சாமியாராக மணி நம்ப வைத்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து, முத்துலட்சுமியின் வீட்டின் பின்புறம் 5 அடி அளவில் பள்ளம் தோண்டிய அவர்கள், தாங்கள் கொண்டுவந்த சிறிய சிலைகள், செம்பு நாணயங்களைக் குழிக்குள் இருந்து எடுத்ததாகக் கூறி முத்துலட்சுமி குடும் பத்தினரிடம் கொடுத்தனர்.
அவர்கள் கூறியபடி, இரண்டு மாதத்திற்கு சாணம், களிமண்ணிற்குள் மூடிவைத்து தங்கச் சிலைகளை வழிபட்டு வந்த முத்துலட்சுமி, ஒருநாள் சோதித்துப் பார்த்த போது, அனைத்தும் பித்தளை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
எலுமிச்சம் பழத்திற்குள் பாத ரசத்தைச் செலுத்தி குலுக்கி தரையில் போட்டால் நகரும் என்று அவர்கள் காவலர்களிடம் கூறிய தாகவும் தகவல்.

