தமிழகத்தில் 364 சீட்டு நிறுவனங்களின் பதிவு ரத்து

தமிழகத்தில் 364 சீட்டு நிறுவனங்களின் பதிவு ரத்து

2 mins read
1c938e4a-7d92-483c-8933-283788c983bf
-

முறைகேடு தொடர்பில் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் பதிவுத்துறை நடவடிக்கை

சென்னை: விதி­மு­றை­க­ளைப் பின்­பற்­றா­மல் பல்­வேறு முறை­கே­டு­களில் ஈடு­பட்ட 364 சீட்டு நிறு­வ­னங்­க­ளின் பதிவு ரத்து செய்­யப்­பட்­டுள்­ளது. பொது­மக்­கள் அளித்த புகா­ரின் பேரில் இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

மாநி­லம் முழு­வ­தும் இயங்கி வரும் சீட்டு நிறு­வ­னங்­கள் தீவி­ர­மாக கண்­கா­ணிக்­கப்­பட்டு வரும் நிலை­யில், பொது­மக்­கள் அளித்த பல்­வேறு புகார்­க­ளின் அடிப்­ப­டை­யில், தமிழ்­நாடு பதி­வுத்­துறை உட­னுக்­கு­டன் நட­வ­டிக்கை எடுத்து வந்­துள்­ளது.

சீட்டு நிறு­வ­னங்­கள், ஏலச் சீட்­டு­கள் நடத்­து­வோர் முத­லில் பதி­வுத்­து­றை­யில் உள்ள சீட்­டுப்­ப­திவு அலு­வ­ல­ரி­டம் பதிவு செய்ய வேண்­டும். மேலும், தாங்­கள் அறி­விக்­கும் சீட்டு திட்­டங்­கள் தொடர்­பான விவ­ரங்­க­ளை­யும் அளிக்க வேண்­டும்.

அதன் பின்­னர் சீட்­டுத் திட்­டங்­க­ளுக்கு இணை­யான தொகையை அந்­தத் திட்­டங்­கள் முடி­யும் காலம் வரை வங்­கி­யில் வைப்­புத்­தொ­கை­யா­கச் செலுத்தி, அதற்­கு­ரிய ஆவ­ணங்­க­ளையும் பதி­வுத்­துறை அதி­கா­ரி­க­ளி­டம் அளிக்க வேண்­டும் என்­பது முக்­கிய விதி­மு­றை­களில் ஒன்­றா­கும்.

ஆனால், பல நிறு­வ­னங்­கள் இந்த நடை­மு­றை­யைப் பின்­பற்று­வ­தில்லை. பதி­வுத்­து­றை­யில் முறை­யா­கப் பதிவு செய்­யா­மல் இயங்­கும் அத்­த­கைய நிறு­வ­னங்­கள் பொது­மக்­க­ளி­டம் லட்­சக்­க­ணக்­கில் பணம்­பெற்று ஏமாற்­று­கின்­றன.

இதை­ய­டுத்து, சீட்டு நிறு­வ­னங்­கள் மீதான கண்­கா­ணிப்பு தீவி­ர­ம­டைந்­துள்­ளது. பொது­மக்­கள் அளிக்­கும் புகார்­க­ளின் பேரில் சில நிறு­வ­னங்­க­ளின் செயல்­பா­டு­கள், குறிப்­பாக, பணப்­ப­ரி­வர்த்­த­னை­கள், வாடிக்­கை­யா­ளர் விவ­ரங்­கள், அறி­விக்­கப்­பட்­டுள்ள சீட்­டுத் திட்­டங்­கள் ஆகி­யவை குறித்து பதி­வுத்­துறை ஆய்வு மேற்­கொள்­கிறது.

முறை­கேடு நடந்­தி­ருக்­கும் பட்­சத்­தில், சீட்டு நிறு­வ­னங்­க­ளின் பதிவு ரத்து செய்­யப்­ப­டு­கிறது. அந்த வகை­யில், கடந்த ஆண்­டில் மட்­டும் 364 சீட்டு நிறு­வ­னங்­க­ளின் பதிவு ரத்து செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் தற்­போது மாநி­லத்­தில் 2,621 சீட்டு நிறு­வ­னங்­கள் மட்­டுமே இயங்கி வரு­வ­தா­க­வும் பதி­வுத்­துறை தெரி­வித்­துள்­ளது.

உரிய பதிவு இன்றிச் செயல்படும் நிறுவனங்கள் மீது வழக்கு தொடுக்கப்படும் என்றும் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் பதிவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.