கீழடி: இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு

கீழடி: இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு

1 mins read
9fe350a2-e43b-4a13-88a2-4e274b648765
-

சிவ­கங்கை: கீழடி 8ஆம் கட்ட அக­ழாய்­வில் இரும்பு உருக்­காலை எச்­சங்­கள் (படம்) கண்­டெ­டுக்­கப்­பட்­டன.

இதை­யடுத்து அப்­பகுதி­யில் சுமார் 2,600 ஆண்டு­க­ளுக்கு முன்பே இரும்பைப் பயன்­படுத்தி இருக்க வாய்ப்­புள்­ள­தாக கரு­தப்­ப­டு­கிறது.

தொடர் அக­ழாய்­வின்­போது மேலும் உறு­தி­யான ஆதா­ரங்­கள் வெளிப்­பட வாய்ப்­புள்­ள­தாக தொல்­லி­யல் துறை ஆய்­வா­ளர்­கள் கரு­து­கின்­ற­னர்.

கீழடி, அக­ரம், கொந்­தகை ஆகிய மூன்று தளங்­க­ளி­லும் தமி­ழக தொல்­லி­யல் துறை சார்­பில் எட்­டாம் கட்ட அக­ழாய்வுப் பணி­கள் நடந்து வரு­கின்­றன. இதன் மூலம் ஏரா­ள­மான பழம்­பெரும் பொருள்­கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

கீழ­டி­யில் ஐந்து குழி­களும் கொந்­தகை, அக­ரத்­தில் தலா இரண்டு குழி­களும் தோண்­டப்­பட்­டுள்ள நிலை­யில், கடந்த வாரம் கீழ­டி­யில் மேலும் இரண்டு முது­மக்­கள் தாழி­கள் கிடைத்­தன.

தற்­போது இரும்­பைக் காய்ச்­சும்­போது மிஞ்­சும் உருக்கு கழிவு­களும் கிடைத்­துள்­ளன.

இதன் மூலம் இரும்­பைக் காய்ச்சி ஆயு­தங்­கள் உள்­ளிட்ட பொருள்­களைச் செய்­தி­ருக்க வாய்ப்­புள்­ள­தா­கக் கரு­தப்­ப­டு­கிறது.