சென்னை: குரங்கம்மை தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குச் சென்றவர்களை உரிய முறையில் பரிசோதனை செய்ய மாவட்ட மருத்துவ அலுவலர்களுடன் இணைந்து, நோய் பரவாமல் தடுக்க ஏற்பாடு செய்யுமாறும் அவர்களை ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
குழந்தைகள் உள்பட அனைவரின் உடலில் விவரிக்க முடியாத தடிப்பு ஏற்பட்டால் எச்சரிக்கையாக இருக்குமாறு ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட மருத்துவ அதிகாரி
களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் உள்ளவர்களை சுகாதார மையங்களில் சேர்க்க ஏற்பாடு செய்யுமாறும் அவர் கூறினார்.
இதற்கிைடயே, ரத்தம், சளி அடங்கிய ஆய்வக மாதிரிகளை தேசிய தொற்றுநோய் ஆய்வு நிறு
வனத்திற்கு அனுப்புமாறு மாவட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.