விபத்து: சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

விபத்து: சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

1 mins read
368d20c1-33ea-4d5e-bbbf-3d2f4f379026
புளியமரம் மீது மோதி சிதைந்த கார். படம்: தமிழக ஊடகம் -

அரி­ய­லூர்: சென்னை அண்­ணா­ந­க­ரைச் சேர்ந்­த­வர் கார்த்­தி­கே­யன், 45. இவர், சென்­னை­யில் உள்ள கணினி நிறு­வ­னத்­தில் மேலா­ள­ரா­கப் பணி­யாற்றி வந்­தார். இவ­ரது மனைவி லட்­சு­மி­பி­ரியா, 36, சென்னை உயர் நீதி­மன்ற வழக்­க­றி­ஞர்.

கார்த்­தி­கே­யன் தனது மனைவி லட்­சு­மி­பி­ரியா, தாய் மஞ்­சுளா, 62, மகள்­கள் மித்ரா, 13, யாஷினி, 8, ஆகி­யோ­ரு­டன் காரில் ராமே­சு­வ­ரத்­துக்­குச் சென்­று­விட்டு, ஊருக்­குத் திரும்­பிக்­கொண்­டி­ருந்­தார். காரை கார்த்­தி­கே­யன் ஓட்­டி­னார்.

அரி­ய­லூர் மாவட்­டம் திரு­மா­னூர் அரு­கே­யுள்ள சாத்­த­மங்­க­லம் பகு­தி­யில் சென்­ற­போது, கட்­டுப்­பாட்டை இழந்த கார், எதிர்­பா­ரா­த­வி­த­மாக சாலை­யோர புளி­ய­ம­ரத்­தின் மீது மோதி­யது.

இதில், பலத்த காய­ம­டைந்த கார்த்­தி­கே­யன், லட்­சு­மி­பி­ரியா, மஞ்­சுளா ஆகி­யோர் அந்த இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­த­னர். படு­கா­ய­ம­டைந்த யாஷினி மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லும் வழி­யில் மாண்­டார். மித்­ரா­வுக்கு சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது. இறந்­த­வர்­க­ளின் உடல்­கள் மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­ம­னைக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டன. விபத்து குறித்து கீழப்­ப­ழு­வூர் காவல்­து­றை­யி­னர் விசா­ரிக்­கின்­ற­னர்.