ஆத்தூர்: தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக ஆட்சி ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று பிற்பகல் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசினார்.
"திராவிட மாடல் எதையும் இடிக்காது, உருவாக்கும். யாரையும் புறக்கணிக்காது, அரவணைக்கும். திமுக கொடுத்த வாக்குறுதிகளை மக்கள் மறந்தாலும் நான் மறக்கமாட்டேன். தமிழக மக்களுக்காக என் சக்தியையும் மீறி உழைப்பேன்.
"பெட்ரோல், டீசல் விலையை பல மடங்கு உயர்த்திவிட்டு தற்போது கண் துடைப்புக்காக சிறி தளவு குறைத்துள்ளனர். இல்லாததை கட்டவிழ்த்துவிட்டுப் பார்க்கும் பலரால் இருப்பதை கண் திறந்து பார்க்க முடியவில்லை. எத்தனை விஷத்தன்மை வாய்ந்த பிரசாரங்களை செய்தாலும் திமுகவை ஒருபோதும் மக்கள் மனதிலிருந்து வீழ்த்த முடியாது," என்று ஸ்டாலின் கூறினார்.

