சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டார்.
அதில், "பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியை கள்ளச் சந்தையில் வாங்கி, அண்டை மாநிலங்களுக்கு அதனை கடத்திச் சென்று வியாபாரம் செய்யும் கடத்தல்காரர்களுக்கு அதிகபட்சத் தண்டனை வழங்க வேண்டும். ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்," என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலிருந்து ஏராளமான மூட்டை ரேஷன் அரிசி ஆந்திர மாநிலத்திற்குக் கடத்தப்பட்டு வருவதாக அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

