சென்னை: வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் நாளை (மே 26) வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து மே 27, 28 ஆகிய தேதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.