சென்னை: தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்க உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண் ணாமலை தெரிவித்துள்ளார்.
இதற்காகச் சென்னை வரும் பிரதமர் மோடி, ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற உள்ள நிகழ்வில் பங்கேற்க உள்ளார்.
பிரதமர் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப் பட்டுள்ளன.
ஹைதராபாத்துக்கும் சென்னைக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
முதல்கட்டமாக ஹைதராபாத் துக்குச் செல்லும் அவர், இந்திய வர்த்தகப் பள்ளியின் (ஐஎஸ்பி) 20வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு பட்ட மளிப்பு விழாவில் உரை நிகழ்த்து கிறார்.
அதன்பின்னர், இன்று மாலை சென்னை வரும் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் பல்வேறு திட்டப் பணி களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், போக்குவரத்து வசதிகளை அதி கரித்தல் உள்ளிட்ட 31,400 கோடி ரூபாய் மதிப்பிலான 11 திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.
இதன்மூலம் தமிழ்நாட்டில் சமூகப் பொருளாதார வளம் மேம்பாடு அடையும். பல்வேறு தரப்பு மக்களுக்கும் வாழ்வியல் ரீதியாக இத்திட்டங்கள் உதவிகரமாக அமையும் என்று நம்பப்படுகிறது.
ரூ.2,900 கோடி செலவில் முடி வுற்றுள்ள ஐந்து பெரும் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
மதுரை-தேனி இடையே ரூ.500 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்ட அகல ரயில் பாதையை தொடங்கிவைக்க உள்ளார்.
இத்திட்டத்தின் மூலம் மதுரை -தேனியில் சுற்றுலாத்துறை வளர்ச்சி அடையும் என்று கூறப்படுகிறது.
அதேபோல், தாம்பரம்-செங்கல் பட்டு இடையே ரூ.590 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மூன் றாவது ரயில் பாதையையும் எரிவாயுக் குழாய் திட்டம், எரிவாயு இணைப்புத் திட்டம் ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
இதன்மூலம் நுகர்வோர்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் மிக எளிமையான முறையில் எரிவாயு விநியோகிக்க முடியும்.
சென்னையில் கலங்கரை விளக்கம் பகுதியில் ரூ. 114 கோடி செல வில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 1,152 வீடுகளையும் திறந்து வைக்கிறார்.
சென்னை துறைமுகம், மதுரவாயல் இடையே இரண்டடுக்கு சாலைத் திட்டம், சென்னை-எழும்பூர் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் திட்டம் உள்பட மொத்தம் ரூ.28,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

