பெண் பாலியல் வன்கொடுமை; போராட்டம்

பெண் பாலியல் வன்கொடுமை; போராட்டம்

1 mins read
d192b696-aded-4510-85ec-743a192009ac
குற்­ற­மி­ழைத்­த­வர்­கள் மீது உட­ன­டி­யாக உரிய நட­வ­டிக்கை எடுக்­கக்கோரி­யும் வட­காடு பகு­தி­யில் இயங்­கி­வ­ரும் இறால் பண்­ணை­களை மூட வலி­யு­றுத்­தி­யும் வட­காடு கிராம மக்­கள் தனுஷ்­கோடி தேசிய நெடுஞ்­சா­லை­யில் சாலை மறி­ய­லில் ஈடு­பட்டனர். படம்: ஊடகம் -

ராமேஸ்­வ­ரம்: ராமேஸ்­வ­ரம் அருகே கடல்­பாசி சேக­ரிக்­கச் சென்ற 40 வயது மீன­வப் பெண்ணை, கூட்­டுப் பாலி­யல் வன்­கொ­டுமை செய்து, உயி­ரோடு எரித்­துக் கொன்­றுள்­ள­னர்.

இந்­தச் சம்­ப­வத்­தைத் தொடர்ந்து சந்­தே­கத்­தின் அடிப்படை­யில் ஆறு வட மாநி­லத்­த­வர்களிடம் காவ­லர்­கள் விசாரித்து வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், இந்­தச் சம்­ப­வத்­தைக் கண்­டித்து, குற்றவாளி களுக்கு கடும் தண்டனை வழங்கக் கோரி ராமேஸ்­வ­ரம் பேருந்து நிலை­யம் அருகே உள்ள தேசிய நெடுஞ்­சா­லை­யில் பெண்­ணின் உற­வி­னர்­களும் பொதுமக்களும் நேற்று காலை முதல் போராட்­டம் நடத்தி னர். ஆங்காங்கே மீனவர்கள் டயர்களை தீவைத்து எரித்தனர்.

உயி­ரி­ழந்த மீன­வப்­பெண்­ணின் குடும்­பத்­திற்கு ரூ.1 கோடி நிவா­ர­ண­மும் குடும்­பத்­தில் ஒரு­வ­ருக்கு அரசு வேலையும் வழங்­கக் கோரியும் போராட்டத்தில் வலியுறுத்தினர்.

இத­னால் ராமேஸ்­வ­ரம் முதல் பாம்­பன் வரை போக்­கு­வ­ரத்து பாதிக்கப்பட்டது.

முதல்­கட்ட விசா­ரணை

உயி­ரி­ழந்த பெண் செவ்­வாய்க்­கிழமை காலையில் கடல்பாசி சேக­ரிக்கச் சென்றபோது, வட­காடு காட்­டுப் பகு­தி­யில் வைத்து, இறால் பண்­ணை­யில் வேலை செய்­யும் ஒடிசா மாநி­லத்தைச் சேர்ந்த மூன்று இளை­ஞர்­கள் கஞ்சா போதை­யில் பாலி­யல் வன்­கொ­டுமை செய்­துள்­ள­னர் என மருத்துவர்களின் முதல்­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ள­தாக காவல்­துறை தெரி­வித்துள்ளது.

இருப்­பி­னும், கிராம மக்­க­ளால் அடித்து, தாக்கி பிடித்து வைக்­கப்­பட்ட ஆறு இளை­ஞர்­களில், பாலியல் வன்கொடுமை செய்த மூவர் யார் என்­பது தெரி­ய­வில்லை.