ஈரோடு: ஈரோட்டில் அடுத்தடுத்து வீடுகளைக் குறிவைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கைதாகி உள்ளனர்.
சுற்றுலாவுக்கு வந்தவர்கள் போல் நடித்து, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் பூட்டியிருக்கும் வீடுகளில் கொள்ளையடிப் பதை வாடிக்கையாக வைத்திருந்ததாக தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மூன்று தம்பதியரும் விசாரணையில் கூறினர்.
ஈரோடு, மூலப்பாளையம் பகுதியில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு பூட்டியிருந்த மூன்று வீடுகளில் கொள்ளை போனது.
இதுகுறித்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், அதே பகுதியில் மீண்டும் இரண்டு வீடுகளில் கொள்ளை அரங்கேறியது.
இதையடுத்து, சிறப்பு தனிப்படை காவலர்கள் கொள்ளையர் களைப் பிடிக்கும் பணியில் முடுக்கி விடப்பட்டனர்.
இந்நிலையில், தெலுங்கானா வைச் சேர்ந்த சூர்யா-பாரதி, மணி-மீனா, விஜய்-லட்சுமி ஆகிய மூன்று தம்பதியரும் சிக்கினர். அவர்களிடமிருந்து 35 பவுன் தங்க நகைகளும் ரூ.50,000 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், இவர்கள் தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகளாக இருப்பதும் தெரியவந்தது.