சென்னை: பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின்னர், ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர் களுக்கு ஜூன் 13ஆம் தேதியும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும் பிளஸ் 1 மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும் பள்ளிப்பாடம் தொடங்கும் என கூறியுள்ளார்.

