'உலகளவில் தமிழர்கள் தலைசிறந்தவர்கள்' மோடி: தமிழ் மொழி பழமையானது, உலகளவில் புகழ்பெற்றது

2 mins read
5ce89e6f-0282-4d7f-afbe-2dce81a3e015
-

சென்னை: தமிழ் மொழி, தமிழ் கலாசாரம் உள்ளிட்ட அனைத்தும் சிறப்பு வாய்ந்தவை எனப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் உரையாற்றிய அவர், முதலில் 'வணக்கம்' என்று தமிழில் குறிப்பிட்டார்.

தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு துறைகளிலும் தலைச் சிறந்தவர்களாக விளங்குவதாக குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டு மண் என்பது சிறப்பு வாய்ந்தது என்றார்.

"தமிழகத்துக்கு மீண்டும் வருவது என்பது சிறப்பான ஒன்று. தமிழ் மொழி நிலையானது, நித்தியமானது. தமிழ் கலாசாரம் உலகளாவியது. தமிழ் மொழி பழைமையானது, அனைத்துலக அளவில் புகழ்பெற்றது.

"சென்னை-கனடா, மதுரை-மலே­சியா, நாமக்­கல்-நியூ­யார்க், சேலம்-தென் ஆப்­பி­ரிக்கா வரை தமிழ் கலா­சா­ரம் இருக்­கிறது," என்­றார் பிர­த­மர் மோடி.

முன்­ன­தா­கப் பேசிய தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின், 'உற­வுக்கு கைகொ­டுப்­போம்; உரி­மைக்கு குரல் கொடுப்­போம் என்­றார்.

திமுக ஆட்­சிப் பொறுப்­பேற்ற பின் பிர­த­மர் மோடி முதல்­மு­றை­யாக பங்­கேற்­றுள்ள அரசு நிகழ்ச்சி இது என்று குறிப்­பிட்ட அவர், கல்வி, பொரு­ளா­தா­ரம், மருத்­து­வம் உட்­பட பல்­வேறு துறை­க­ளி­லும் தமி­ழ­கம் சிறந்து விளங்­கு­கிறது என்­றார்.

"மாநி­லங்­க­ளுக்கு மத்­திய அரசு போது­மான நிதிப்­பங்­கீடு வழங்க வேண்­டும். மத்­திய அர­சின் திட்­டங்­களில் மாநில அர­சின் பங்கு அதி­கம். ஒட்­டு­மொத்த இந்­திய நாட்­டின் வளர்ச்­சி­யில் தமிழ்­நாட்டு மக்­க­ளின் பங்­க­ளிப்பு மிக­வும் முக்­கி­ய­மா­னது. இந்தி மொழிக்கு இணை­யான தமிழ் மொழியை உயர் நீதி­மன்­றத்­தில் வழக்­காடு மொழி­யாக அறி­விக்க வேண்­டும்," என்­றார் முதல்­வர் மு.க.ஸ்டா­லின்.

தமி­ழ­கத்­தின் பங்­க­ளிப்­புக்கு ஏற்ப, நிதி ஒதுக்­கீடு அதி­க­ரிக்க வேண்­டும் என்­றும் வரி­யைச் சம­மாக பகிர்ந்­த­ளிப்­பதே உண்­மை­யான கூட்­டாட்சி என்­றும் அவர் கூறி­னார்.

மத்­திய அர­சின் நிதி குறைப்­பால் மாநி­லங்­க­ளுக்கு நிதிச்­சுமை ஏற்­ப­டு­வ­தா­கக் குறிப்­பிட்ட முதல்­வர் ஸ்டா­லின், தமி­ழ­கத்­துக்கு வழங்க வேண்­டிய ஜிஎஸ்டி நிலு­வைத்­தொகை ரூ.14,000 கோடியை விரைந்து வழங்க வேண்­டும் என வலி­யு­றுத்­தி­னார்.

"கச்­சத்­தீவை மீட்­டெ­டுத்து உரி­மையை நிலை­நாட்ட இதுவே தகுந்த தரு­ணம். நீட் தேர்வு விவ­கா­ரத்­தில் உரிய நட­வ­டிக்கை வேண்­டும்," என்­றார் மு.க.ஸ்டா­லின்.

விமான நிலை­யத்­தில் இருந்து பிர­த­மர் பங்­கேற்ற நிகழ்ச்சி நடை­பெற்ற நேரு அரங்­கம் வரை செல்­லும் வழி­யெங்­கும் பாஜ­க­வி­ன­ரும் திமு­க­வி­ன­ரும் கூடி­யி­ருந்­த­னர். திமு­க­வி­னர் 'தள­பதி வாழ்க' என்று முழக்­க­மிட, பாஜ­க­வி­ன­ரும் 'பாரத் மாதா கி ஜே' என்று முழக்­க­மிட்­ட­தால் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.