தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முன்விரோதத்தால் பாஜக நிர்வாகி படுகொலை: நான்கு பேர் கைது

2 mins read
cf1c110f-4150-4012-ac1b-c665b9dbe134
பாலச்சந்தர். படம்: ஊடகம் -

சென்னை: பாஜக நிர்­வாகி படு­கொலை செய்­யப்­பட்ட வழக்கு தொடர்­பில் நான்கு பேரை சென்னை காவல்­துறை கைது செய்­துள்­ளது.

முன்­வி­ரோ­தம் கார­ண­மாக இந்­தப் படு­கொலை நிகழ்ந்­துள்­ள­தாக காவல்­துறை தெரி­வித்­தது.

சென்­னை­யைச் சேர்ந்த 34 வய­தான பாலச்­சந்­தர், பாஜக பட்­டி­ய­லி­னப் பிரி­வின் மத்­திய சென்னை மாவட்­டத் தலை­வ­ராக இருந்து வந்­தார்.

இவ­ருக்­கும் அப்­ப­கு­தி­யைச் சேர்ந்த ரவு­டி­கள் சில­ருக்­கும் முன்­வி­ரோ­தம் இருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இதன் கார­ண­மாக போலிஸ் பாது­காப்பு வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லை­யில், இரு தினங்­களுக்கு முன்பு சென்னை சிந்­தா­தி­ரிப்­பேட்டை பகு­தி­யில் பாலச்­சந்­தர் வெட்­டிக்­கொல்­லப்­பட்­டார்.

அவ­ருக்­குப் பாது­காப்­பாக உடன் வரும் காவ­லர் தேநீர் அருந்த அரு­கி­லுள்ள தேநீர்க் கடைக்­குச் சென்ற நேரத்­தில், சாலை­யோ­ரம் இரு­சக்­கர வாக­னத்­தில் காத்­தி­ருந்­தார் பாலச்­சந்­தர்.

இந்த வாய்ப்பை பயன்­ப­டுத்­திக்­கொண்ட கொலை­யா­ளி­கள், திடீ­ரென அங்கு வந்து பாலச்­சந்­தரை சுற்றி வளைத்து அரி­வாள்­கள் உள்­ளிட்ட ஆயு­தங்­க­ளால் சர­மா­ரி­யாக வெட்­டிக் கொன்­ற­னர்.

பாது­காப்புக் காவ­லர் வரு­வ­தற்­குள் கொலை­யா­ளி­கள் ஆறு பேரும் தப்பி ஓடி­விட்­ட­னர். காவல்­து­றை­யின் முதற்­கட்ட விசா­ர­ணை­யில் முன்­வி­ரோ­தம் கார­ண­மாக இந்­தப் படு­கொலை நிகழ்ந்­தி­ருப்­பது தெரிய வந்­துள்­ளது.

சிந்­தா­தி­ரிப்­பேட்டை பகு­தியில் பால­ச்சந்­த­ரின் உற­வி­னர்­கள் துணிக்­கடை நடத்தி வரு­கின்­ற­னர். அந்­தக் கடை­யில் லஞ்­சம் கேட்டு அதே பகு­தி­யைச் சேர்ந்த பிர­தீப் என்­ப­வர் மிரட்டி வந்­துள்­ளார். அது­கு­றித்து தெரிய வந்­த­தும் பாலச்­சந்­தர் காவல்­து­றை­யில் அளித்த புகா­ரின் பேரில் பிர­தீப் கைதா­னார்.

இத­னால் பிர­தீப்­பின் தந்தை தர்கா மோக­னுக்­கும் பாலச்­சந்­த­ருக்­கும் இடையே மோதல் ஏற்­பட்­டது.

இந்­நி­லை­யில், பாலச்­சந்­தர் அளித்த புகா­ரின் பேரில் சிறை­யில் அடைக்­கப்­பட்­டி­ருந்த பிர­தீப், பத்து நாள்­க­ளுக்­குப் பிறகு பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டார். அதை­ய­டுத்து, அவர் மீண்­டும் அத்­து­ணிக்­க­டைக்­குச் சென்று மிரட்­டல் விடுத்­த­தா­க­வும் இத­னால் அவர் மீது காவல்­துறை­யி­டம் மீண்­டும் புகார் அளிக்­கப்­பட்­டது என்­றும் ஊட­கச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன.

இத­னால் கடும் கோபம் அடைந்த பிர­தீப், அவ­ரது சகோ­த­ரர் உள்­ளிட்ட ஆறு பேர் சேர்ந்து பாலச்­சந்­தரை வெட்­டிக்­கொன்­றுள்­ள­னர்.

இதற்­கி­டையே, பாலச்­சந்­தர் மீதும் சில வழக்­கு­கள் நிலு­வை­யில் இருப்­பது தெரிய வந்­துள்­ளது. அவர் ரவு­டி­கள் பட்­டி­ய­லில் இருந்­த­தா­க­வும் 2019ஆம் ஆண்­டு­தான் அதி­லி­ருந்து அவ­ரது பெயர் நீக்­கப்­பட்­டது என்­றும் ஊட­கச் செய்­தி­கள் மேலும் தெரி­விக்­கின்­றன.

இந்­நி­லை­யில், அவ­ரைக் கொலை செய்த பிர­தீப் உள்­ளிட்­ட­வர்­கள் சேலம் மாவட்­டம் எடப்­பாடி­யில் பதுங்கி இருப்­ப­தாக காவல்­துறைக்குத் தக­வல் கிடைத்­தது.

இதை­ய­டுத்து, தனிப்­படை போலி­சார் அங்கு விரைந்து சென்று பிர­தீப் உள்­ளிட்ட நான்கு பேரைக் கைது செய்­த­னர். மேலும் இரண்டு பேருக்கு வலை­வீ­சப்­பட்­டுள்­ளது.