மநீம மாநிலச் செயலாளர் பதவி விலகல்

சென்னை: மக்­கள் நீதி மய்­யம் கட்­சி­யில் இருந்து அதன் தலைமை நிலைய மாநிலச் செய­லர் பொறுப்­பில் இருந்த இ.சரத்­பாபு வில­கி­உள்­ளார். கட்­சித் தலை­வர் கமல்­ஹாசனுக்கு கட்­சி­யில் ஈடு­பாடு குறைந்­த­து­விட்­டது என்­றும் அதுவே தமது வில­கல் முடி­வுக்­குக் கார­ணம் என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

தமி­ழ­கத்­தில் நடை­பெற்ற இரு உள்­ளாட்­சித் தேர்­தல்­க­ளி­லும் மக்­கள் நீதி மய்­யம் கட்­சித் தலை­வர் கமல்­ஹா­ச­னின் ஈடு­பாடு மிக­வும் குறை­வாக இருந்­தது என்று அறிக்கை ஒன்­றில் சரத்­பாபு குறிப்­பிட்­டுள்­ளார்.

"கட்­சித் தலை­வர் இப்­போது வரு­வாய் ஈட்­டும் மன­நி­லைக்கு முழு­வ­து­மாகச் சென்­று­விட்­டார். இத­னால் தமிழ்­நாட்­டில் இக்­கட்சி­யால் எவ்­வித மாற்­றத்­தை­யும் மக்­க­ளுக்­காக கொண்­டு­போய்ச் சேர்க்­க­மு­டி­யாது என்ற நிலை­யில், இக்கட்­சி­யில் தொடர மன­மில்­லா­மல் வில­கு­கி­றேன்," என்று சரத்­பாபு தெரி­வித்­துள்­ளார்.

கட்­சித் தலை­வர் என்ற வகை­யில் கமல்­ஹா­ச­னின் கொள்­கை­களை தமி­ழ­கத்­தின் அனைத்து பகு­தி­க­ளுக்­கும் கொண்டு சேர்க்­கும் பணி­யில் தாம் ஈடு­பட்­டி­ருந்­த தாக அவர் கூறியுள்ளார்.

மக்­கள் நீதி மய்­யம் கட்­சி­யின் துணைத் தலை­வ­ராக இருந்த மகேந்­தி­ரன், சுற்­றுச்­சூ­ழல் அணி நிர்­வாகி பத்­ம­பி­ரியா, தலைமை நிலைய பொதுச்­செ­ய­ல­ராக இருந்த முன்­னாள் ஐஏ­எஸ் அதி­காரி சந்­தோஷ் பாபு போன்­றோர் ஏற்­கெ­னவே அக்­கட்­சி­யில் இருந்து வெளி­யே­றி­விட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!