பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் நிரபராதி என விடுவிப்பு

1 mins read
e12c0b7d-a319-4197-9a14-f4e960486f03
போது­மான ஆதா­ரங்­கள் கிடைக்­க­வில்லை என்று கூறி ஆர்­யன் கான் மீதான வழக்கை போதைப் ­பொ­ருள் தடுப்புப் பிரிவு கைவிட்­டு உள்­ளது. படம்: ஊடகம் -

மும்பை: போதைப் பொருள் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் நிர­பராதி என நேற்று விடுவிக்கப்பட்டார்.

மும்­பை­யின் கார்­டெல்லா குரூஸ் கப்­பலில் 2021 அக்­டோ­பரில் நடந்த விருந்து நிகழ்ச்­சி­யில், போதைப்­பொ­ருள் வைத்­தி­ருந்­த­தாக போதைப்­பொ­ருள் தடுப்புப் பிரி­வால் ஆர்­யன் கான் கைது செய்­யப்­பட்­டார். அவ­ரோடு சேர்த்து 14 பேர் மீது வழக்­குப் பதி­யப்­பட்­டது.

இவ்­வ­ழக்­கில் ஆர்­யன் கான் போதைப்­பொ­ருள் தொடர்­பாக பெரிய அளவில் சதி­ எதிலும் ஈடு­ப­ட­வில்லை என்­றும் அனைத்­து­லக போதைப்பொருள் கடத்­தல் கும்­ப­லு­டன் அவருக்குத் தொடர்பில்லை என்­றும் முன்­ன­தாக நடத்திய விசா ரணையில் தெரி­விக்கப்பட்டது.

இந்­நி­லை­யில், போது­மான ஆதா­ரங்­கள் இல்லையெனக் கூறி ஆர்யன் உள்­பட ஆறு பேர் மீதான வழக்கை போதைப்­பொ­ருள் தடுப்புப் பிரிவு கைவிட்­டுள்­ள­தாக இந்­தி­யன் எக்ஸ்­பி­ரஸ் தக­வல் கூறியுள்­ளது.