விவா­க­ரத்­தான பெண்­களை குறி­வைத்து மோசடி

விவா­க­ரத்­தான பெண்­களை குறி­வைத்து மோசடி

2 mins read
7f894617-b50f-4073-b328-193e20db82fb
-

சென்னை: சென்னை, துபா­யில் வசிக்­கும் விவா­க­ரத்­தான பெண்­கள் பல­ரி­டம் திரு­மண ஆசை காட்டி மோசம் செய்­துள்ள அர­விந்த் என்ற ஆட­வ­ரைக் காவல்­துறை­யி­னர் கைது செய்­து நீதி­மன்­றத்­தில் முன்­னிலைப்­ப­டுத்தி சிறை­யில் அடைத்­த­னர்.

"மேட்­ரி­மோனி திரு­மண வலைத் ­த­ளம் மூலம் கண­வர் இல்­லா­மல் இருக்­கும் பெண்­கள், விவா­க­ரத்­தான பெண்­க­ளைக் குறி­வைத்து திரு­ம­ணம் செய்­வ­தா­கக் கூறி பணம், நகை­க­ளைப் பறித்­துக் கொண்டு தலை­ம­றை­வாகி விடு­வது என் வாடிக்கை. சென்னை தேனாம்­பேட்­டை­யில் என்­மீது இது­போன்று பல பெண்­கள் புகார் அளித்­துள்­ள­னர்," என்று விசா­ர­ணை­யில் அர­விந்­த் சொன்னார்.

சென்னை ஆவடி பகு­தி­யைச் சேர்ந்­த­வர் தீபா (பெயர் மாற்­றப் பட்­டுள்­ளது). ஆறு ஆண்­டு­க­ளுக்கு முன்பு திரு­ம­ண­மாகி விவா­க­ரத்து பெற்றுள்­ளார்.

ஆட்­களைத் தேர்வு செய்து பெரிய நிறு­வ­னங்­க­ளுக்கு வேலைக்கு அனுப்­பும் நிறு­வ­னத்தை நடத்தி வருகிறார் தீபா. இவருக்கு கடந்த இரண்­டாண்டு­க­ளுக்கு முன்பு மேட்­ரி­மோனி மூலம் சென்னை ஈக்­காட்­டுத்­தாங்­க­லைச் சேர்ந்த அர­விந்த் அறி­மு­க­மா­கி­யுள்­ளார்.

தீபா­வி­டம் தான் துபா­யில் பணி புரிந்து வரு­வ­தா­க­வும் தனக்­கும் விவா­க­ரத்து ஆகிவிட்ட­தா­க­வும் நல்ல வர­னைப் பார்த்து வரு­வ­தா­க­வும் அர­விந்த் கூறி­யுள்­ளார். இதனை நம்­பிய தீபா, அர­விந்­தனை நேரில் சந்­தித்­துப் பேசி­யுள்­ளார். மிக­வும் அன்­பா­ன­வ­ராக நடந்து கொண்ட அர­விந்தை தீபா திரு­மணம் செய்துகொள்வதாக ஒப்­புக்­கொண்­டுள்­ளார். அர­விந்தை மிக­வும் நம்பி­யிருந்த தீபா­விடம், தாய் தந்தையின்றி தனி­மை­யில் இருக்­கும் உன்­னி­டம் நகை­கள், பணம் இருப்­பது பாது­காப்பு இல்லை. எனவே, அவற்றை தன்­னி­டம் கொடுத்து வைத்­தால் பாது­காப்­பாக வைத்­தி­ருப்­ப­தா­கக் கூறி­யுள்­ளார்.

அதனை நம்­பிய தீபா, தனது 50 சவ­ரன் நகை, பணத்தை தி.நக­ரில் தங்­கி­யி­ருந்த அர­விந்­த­னி­டம் கொடுத்­துள்­ளார். நகை­கள், பணத்தைப் பெற்­றுக்கொண்டபின் அர­விந்­தனை தொடர்­பு­கொள்ள முடி­ய­வில்லை. அர­விந்­தன் வீட்­டின் அக்­கம்­பக்­கத்­தி­ல் இருந்தவர்களிடம் தீபா விசா­ரித்தபோது அரவிந்த் ஏற்ெ­க­னவே திரு­ம­ணமாகி குடும்­பத்­து­டன் இருப்­ப­தா­கத் தெரி­வித்­துள்­ள­னர். அதிர்ச்சியடைந்த தீபா சென்னை பாண்டி பஜார் காவல் நிலை­யத்­தில் புகார் அளித்­தார்.