மதுரை: இந்தியாவின் மிகப்பெரிய தங்கச் சங்கிலியை வாங்கியுள்ளார் வரிச்சூர் செல்வம் (படம்). நகைக்கடையில் அந்த நகையை ஆர்டர் செய்து வாங்கியவர், அதை அங்கேயே அணிந்து மகிழ்ந்தார்.
மதுரை மாவட்டம், வரிச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவர் மீது கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகள் இருந்த நிலை யில், இப்போது ரவுடித்தனத்தில் இருந்து ஒதுங்கி அமைதி காத்து வருகிறார்.
நடமாடும் நகைக்கடை என வர்ணிக்கப்படும் இவர், தற்போது வட்டிக்கு விடும் தொழிலையும் சொத்து முகவர் ெதாழிலையும் செய்து வருகிறார்.
ெகாரோனா காலத்திலும் கூட 10 பவுனில் தங்க முகக் கவசத்தை அணிந்துகொண்டு வலம் வந்தார்.
இப்போது முறுக்கு சங்கிலி போல் அவர் அணிந்துள்ள 100 பவுன் கழுத்தணியை இருவர் சேர்ந்துதான் அணிவிக்க முடியுமாம். இந்தியாவிலேயே அதிகபட்சமான நகையை அணிந்தவர் என்ற பெருமையும் இவருக்குக் கிடைத்துள்ளது. 'கேங்'கோடு சென்றால்தான் ரவுடி, தான் எப்போதும் தனித்தே செல்வதால் ரவுடி இல்லை என்றும் வாதம் செய்கிறார்.

