அமைச்­சர் பொன்­முடி: புதிய கல்­விக் கொள்­கையை ஏற்­க­மாட்­டோம்

அமைச்­சர் பொன்­முடி: புதிய கல்­விக் கொள்­கையை ஏற்­க­மாட்­டோம்

1 mins read
d7f9f415-a315-47e2-85b5-eed4928791eb
-

சென்னை: தமிழ்­நாட்­டில் புதிய கல்­விக் கொள்­கையை ஒரு­போ­தும் நடை­மு­றைப்­ப­டுத்த மாட்­டோம் என்று அமைச்­சர் பொன்­முடி திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ளார்.

விரை­வில் மாநி­லக் கல்­விக் கொள்கை உரு­வாக்­கப்­படும் என­வும் அவர் உறுதி கூறி­யுள்­ளார்.

தேசிய கல்வி கொள்கை சுமூ­க­மாக நிறை­வேற்­றப்­படும் என்று தமி­ழக ஆளு­நர் ஆர். என்.ரவி நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளார்.

ேதசிய கல்­விக் ெகாள்­கை­யைச் செயல்­ப­டுத்­தி­னால் நாடு வளர்ச்­சிப் பாதை­யில் செயல்படும் என்­றும் ஆளு­நர் கூறி­னார்.

திரு­வா­ரூ­ரில் உள்ள தமிழ்­நாடு மத்­திய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் நடை­பெற்ற தேசிய கல்­விக் கொள்கை அம­லாக்­கம் குறித்த கருத்­த­ரங்­கில் பங்­கேற்­றுப் பேசிய அவர், "மக்­க­ளுக்கு நன்மை பயக்­கும் பல்­வேறு திட்­டங்­கள் நடை­மு­றைக்கு கொண்­டு­வ­ரப்­ப­டு­வ­தா­க­வும் அதனை சரி­யா­கப் புரிந்­துெ­காண்டு செயல்­ப­டுத்­தி­னால் நல்ல பலன் கிடைக்­கும்," என்றும் ஆளு­நர் தெரி­வித்­தார். எல்­லா­வற்­றி­லும் கருத்து வேறு­பா­டு­கள் என்­பது நாட்­டின் வளர்ச்­சிக்கே தடை ஏற்­ப­டுத்­தும் என்­றும் அவர் சொன்னார்.

தொலை­நோக்­குப் பார்­வை­யோடு உரு­வாக்­கப்­பட்­டுள்ள தேசிய கல்­விக் கொள்கை நம்­மு­டைய அடை­யா­ளங்­களை தெரிந்­து­கொள்ள பயன்­படும் என்­றார் ஆளு­நர்.