700 கிலோ கலப்­பட மசாலா பறி­மு­தல்

700 கிலோ கலப்­பட மசாலா பறி­மு­தல்

1 mins read
889c4b01-7de8-4dde-9f3d-73bc3e063aa9
-

சேலம்: சேலத்­தில் மசாலா தயா­ரிப்பு நிறு­வ­னத்­தில் இருந்து 700 கிலோ கலப்­பட மசா­லா­வைப் பறி­மு­தல் செய்து உண­வுப் பாது­காப்­புத்­துறை அதி­கா­ரி­கள் விசா­ரித்து வரு­கின்­ற­னர்.

உடல்­ந­ல­னுக்கு தீங்கு விளை­விக்­கும் போலி­யான பொருள்­க­ளைக் கொண்டு சாம்­பார் மசாலா, கோழி, இறைச்சி மசாலா, ரசப்­பொடி, மிள­குத் தூள் உள்­ளிட்ட மசாலா பொரு­ள்­க­ளைத் தயா­ரித்­தி­ருந்­தது உண­வுப் பாது­காப்­புத் துறை அதி­கா­ரி­க­ளின் சோத­னை­யில் தெரி­ய­வந்­தது.

இதை­ய­டுத்து, மசா­லாப் பொட்­ட­லங்­கள் அனைத்­தை­யும் அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­த­னர்.

சேலம் மாந­கர், உடை­யாப்­பட்டு பகு­தி­யில் செயல்­பட்டு வந்த ஏற்­காடு மசாலா நிறு­வ­னத்­தில் உண­வுப் பாது­காப்பு அதி­கா­ரி­கள் திடீ­ரென ஆய்வு செய்­த­னர்.

அந்த ஆய்­வில், ஒன்­றரை லட்ச ரூபாய் மதிப்­பி­லான 700 கிலோ அள­வில் கலப்­பட மசாலா இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

இந்த மசாலா மற்ற மளி­கைக் கடை­க­ளுக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளதா? இங்கு தயா­ரிக்­கப்­பட்ட மசா­லாக்­கள் வேறு எங்­கா­வது ஆல யங்­கள், சமை­யல் கடை­களில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றதா? என்­பது குறித்து விசா­ரணை நடத்­தி­னர். கடை­களில் அவற்றை விற்­பனை செய்­யக்­கூ­டாது என­வும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்ளது.

கடை­க­ளுக்கு விநி­யோ­கம் செய்­யப்­பட்ட மசா­லாக்­க­ளை­யும் பறி­முதல் செய்ய உத்­த­ர­விட்ட அதி­கா­ரி­கள், உடை­யாப்­பட்­டி­ல் வீடு­போல் அமைத்து, மசாலா விற்­ப­னை­யில் ஈடு­பட்டு வந்த கடை­யின் உரி­மையா­ளர் பழ­னி­யப்­ப­னி­டமும் விசா­ரித்து வரு­கின்­ற­னர். இதுகுறித்து வழக்குப் பதிந்து கடும் நட வடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.