பாம­க­வின் தலை­வ­ரா­னார் அன்­பு­மணி ராம­தாஸ்

பாம­க­வின் தலை­வ­ரா­னார் அன்­பு­மணி ராம­தாஸ்

1 mins read
99c1ee85-fa65-4762-be12-816e9ac2374d
அன்­பு­மணி ராம­தாஸ். -

சென்னை: பாட்­டாளி மக்­கள் கட்­சி­யின் சிறப்­புப் பொதுக்­குழு கூட்­டம், சென்னை அருகே திரு­வேற்­காட்­டில் நேற்று நடந்­தது. இந்­தக் கூட்­டத்­தில் பாமக தலை­வ­ராக அன்­பு­மணி ராம­தாஸ் ஒரு­ம­ன­தாக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டார்.

கடந்த 2006ஆம் ஆண்டு முதல் இளை­ஞ­ரணி தலை­வ­ராக இருந்து வரும் இவர், தற்­போது மாநி­லங்­களவை எம்.பி.யாக­வும் பணி­யாற்றி வரு­கி­றார்.

அன்­பு­மணி தலை­வ­ராக அறி விக்­கப்­பட்­ட­தும் கூட்­டத்­தி­னர் கர­கோ­ஷம் எழுப்பி மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்­தி­னார்­கள்.

மத்­திய மாவட்­டச் செய­லா­ளர்­கள் கே.என்.சேகர், தலை­வர் அனந்­த­கி­ருஷ்­ணன், நிர்­வா­கி­கள் உள்­ளிட்­டோர் அன்­பு­ம­ணிக்கு ஆளு­யர மாலை அணி­வித்து வெள்ளி வாளைப் பரி­ச­ளித்­த­னர்.

தொடர்ந்து முக்­கிய நிர்­வா­கி­கள் அன்­பு­ம­ணிக்கு சால்­வை­கள், மாலை கள் அணி­வித்து வாழ்த்து தெரி வித்­த­னர். அன்­பு­ம­ணி­யைக் கட்­டித் தழுவி பாமக நிறு­வ­னர் டாக்­டர் ராம­தாஸ் வாழ்த்து தெரி­வித்­தார்.

கட்­சியை அடுத்­த­கட்­ட­மாக வழி­ந­டத்­திச் செல்­லும் வகை­யில் அன்­பு­ம­ணியை வாழ்த்தி '2.0' என்ற விளம்­ப­ரங்­கள் பளிச்­சிட்­டன. 'ஆளப்­போ­கி­றான் பாட்­டாளி', '2026ல் அன்­பு­மணி தலை­மை­யில் ஆட்சி அமைப்­போம்' என்று பாம­க­வி­னர் முழங்கினர்.

இதை­ய­டுத்து, வரப்­போ­கும் தேர்­த­லுக்கு பாமக தயா­ராகி வரு­வ­தா­க­வும் எம்பி மற்­றும் சட்­ட­மன்­றத் தேர்­தலை குறி­வைத்து அன்­பு­ம­ணி­யின் அர­சி­யல் களம் நக­ரப் போவ­தா­க­வும் தக­வல்­கள் குறிப்­பிட்­டுள்­ளன.