திருச்சி: மதுரையில் மாலா என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி வளர்த்து வந்த பெண் யானையை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதனை திருச்சியில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
மதுரை மாவட்டம், தல்லாகுளம் பகுதியில் உள்ள கமலா நகரைச் சேர்ந்தவர் மாலா. இவர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பீகாரில் இருந்து 22 வயதுடைய ரூபாலி என்ற பெண் யானையை வாங்கி வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், இவர் முறையான அனுமதியும் ஆவணங்களும் இல்லாமல் யானையை வளர்த்து வருவ தாக மதுரை மாவட்ட வனத்துறையினருக்குப் புகார் வந்தது.
அத்துடன், யானையை முறை யாகப் பராமரிக்காமல் திருவிழாக்கள், கோயில்களுக்கு அனுப்பி அதன்மூலம் மாலா பணம் சம்பா தித்து வருவதாகவும் குற்றம்சாட்டப் பட்டது.
இதையடுத்து, ரூபாலி உரிய பராமரிப்பு இல்லாமல் இருப்பதைக் கருத்தில்கொண்டு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், யானையை மீட்டு திருச்சியில் உள்ள யானைகள் மீட்பு, மறுவாழ்வு மையத்திற்கு அழைத்துச் செல்ல வன அதிகாரிகளும் காவல்துறையினரும் வந்திருந்தனர்.
ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவச் சிகிச்சை பெற்று வரும் யானையை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என்ற விதிமுறையை வனத்துறையினர் மீறுவதாகக் கூறி மாலா வாக்குவாதம் செய்தார்.
நான்கு ஆண்டுகளாக தான் வளர்ந்து வந்த இடத்தை விட்டு பிரிந்து செல்ல விரும்பாத ரூபாலி, அங்கிருந்து செல்ல அடம்பிடித்தது.
யானைகள் மறுவாழ்வு மையத்தில் ஏற்கெனவே மலாத்தி, சந்தியா, ஜெயந்தி, கோமதி, ஜமிலா, இந்து, ரோகினி, இந்திரா என்ற யானைகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ரூபாலியும் ேசர்ந்துள்ளதால் மொத்தம் ஒன்பது யானைகளை திருச்சி வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.
மோசமான முறையில் பராமரிக்கப்பட்ட ரூபாலி யானை மதுரையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டது. திருச்சி அருகே உள்ள எம்.ஆர். பாளையத்தில் உள்ள யானைகள் மீட்பு, மறுவாழ்வு மையத்தில் 22 வயது ரூபாலி புதிதாக சேர்க்கப்பட்டது.
படம்: இந்து ஊடகம்

