வெங்கையா: தாய்மொழி என்பது கண்பார்வையைப் போன்றது

வெங்கையா: தாய்மொழி என்பது கண்பார்வையைப் போன்றது

2 mins read
f0cb97be-989f-481c-ae54-a3aaee98df78
சென்னையில், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள காலஞ்சென்ற முதல்வர் கருணாநிதியின் 16 அடி உயர, உருவச் சிலையை துணை அதிபர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். அப்போது கருணாநிதி மிகச் சிறந்த நிர்வாகி, பேச்சாளர் என்று அவர் புகழாரம் சூட்டினார்.படம்: ஊடகம் -

சென்னை: தாய் மொழி, தாய் நாட்டை எந்த வகை­யி­லும் மறக்­கக்­கூ­டாது என்று துணை அதி­பர் வெங்­கையா நாயுடு தெரி­வித்­துள்­ளார்.

அம்­மாவை தாய்­மொ­ழி­யில் அழைத்­தால் அந்­தக் குரல் இத­யத்­தில் இருந்து வரும் என்­றும் தாய்­மொழி என்­பது ஒரு­வ­ரது கண்­ணின் பார்வை போன்­றது என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

சென்­னை­யில் காலஞ்­சென்ற முன்­னாள் முதல்­வர் கரு­ணா­நிதி சிலைத் திறப்பு விழா­வில் கலந்து கொண்டு பேசிய துணை அதி­பர், 'மம்மி, டாடி' என்று அழைக்­கும் கலா­சா­ரத்­தைக் கைவிட வேண்­டும் என வலி­யு­றுத்­தி­னார்.

"கண்­பார்வை போன்ற தாய் மொழி­யைத் தவிர மற்ற மொழி­கள் எல்­லாம் கண்­ணாடி போன்­றவை. பார்வை இல்­லா­விட்­டால் கண்­ணாடி­யால் எந்தப் பய­னும் இல்லை. வீட்­டில் தாய் மொழி­யில் பேசுங்­கள்.

"நமது தாய் மொழி தெரி­யா­த­வர்­க­ளி­டம் வேண்­டு­மா­னால் வேறு மொழி­யில் உரை­யா­ட­லாம். மற்ற மொழி­களைப் படிப்­ப­தில் தவறு இல்லை. ஆனால் தாய்­மொ­ழியைப் படித்­து­விட வேண்­டும்.

"உயர் பத­விக்கு வந்­தா­லும் எனது பாரம்­ப­ரிய உடையைக் கூட நான் மாற்­றிக்­கொள்­ள­வில்லை. நாம் எந்த மொழி­யை­யும் எதிர்க்கக் கூடாது. ஆனால், நமது தாய் மொழியை நாம் ஆத­ரிக்க வேண்டும்," என்­றார் துணை அதி­பர் வெங்­கையா நாயுடு.

தற்­போது சில முரண்­பா­டு­கள் நில­வு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், எந்த மொழி­யை­யும் திணிக்கக் கூடாது என்­றும் அதே நேரத்­தில் மொழி­களை எதிர்க்­கக் கூடாது என்­றும் தெரி­வித்­தார்.

நிலை­யான அர­சாட்சி வழங்­கிய ஒரு சிறந்த நிர்­வாகி, சிறந்த பேச்சா­ளர் கரு­ணா­நிதி என்­றும் தமது மாண­வப் பரு­வம் முதல் கருணா­நி­தி­யின் பேச்­சுக்­களை உன்­னிப்­பா­கக் கவ­னித்­த­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

"கொள்­கை­க­ளை­யும் யோச­னை­க­ளை­யும் அவர் சொன்ன விதம், அந்த இளம் வய­தில் என்னை ஈர்த்தது. எனக்­கென்று ஓர் அரசியல் கொள்­கை­ இருந்தது. அவரது கொள்­கை­யில் இருந்து மாறு­பட்டு இருந்தாலும், தனது கருத்து­களை மக்­கள் மத்­தி­யில் அவர் கொண்டு சேர்த்த விதம் என்னைக் கவர்ந்­தது," என்று துணை அதி­பர் வெங்­கையா தெரி­வித்­தார்.

"கரு­ணா­நிதி, கூர்­ம­தி­யுள்ள அர­சி­யல்­வா­தி­யாக இருந்து, போட்டி­யிட்ட அனைத்து தேர்­த­லி­லும் வெற்றி பெற்­றார். அது­மட்­டு­மல்­லா­மல் அவ­ரது கட்­சி­யின் தலைமை பத­வி­யில் 50 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக நீடித்­தார்.

"தமி­ழ­கத்­தின் வளர்ச்சிப் பாதை­யில் என்­றும் அழி­யாத தடத்தை விட்டுச் சென்­றுள்ள உண்­மை­யான பன்­முக ஆளுமை கொண்­ட­வர் கரு­ணா­நிதி," என்று துணை அதிபர் வெங்­கையா நாயுடு புக­ழா­ரம் சூட்டினார்.