நூற்றுக்கணக்கான பெண்களுக்கு சட்ட விரோதமாக கருக்கலைப்பு: ஏழு பேர் கைது

நூற்றுக்கணக்கான பெண்களுக்கு சட்ட விரோதமாக கருக்கலைப்பு: ஏழு பேர் கைது

2 mins read
210d0cdf-8c74-4b0e-9c9e-d47cfe0ab0dc
-

தர்­ம­புரி: நூற்­றுக்­க­ணக்­கான பெண்­க­ளுக்கு சட்­ட­வி­ரோ­த­மாக கருக்­க­லைப்பு செய்த மூன்று பெண்­கள் உட்­பட ஏழு பேரை தர்­ம­புரி காவல்­துறை கைது செய்­துள்­ளது.

கரு­வில் இருப்­பது ஆணா, பெண்ணா என்­பதை நவீன 'ஸ்கேன்' கருவி மூலம் முன்பே தெரிந்துகொண்டு, அதன் பின்­னர் இந்­தக் கருக்­க­லைப்­பு­கள் அரங்கேறி உள்­ளன.

கிருஷ்­ண­கி­ரி­யைச் சேர்ந்த 27 வய­தான வனஜா என்­ப­வ­ருக்கு அரை­கு­றை­யாக கருக்­க­லைப்பு செய்­ததை அடுத்து அவர் காவல்­து­றை­யில் அளித்த புகார் கார­ண­மாக இந்­தக் கருக்­க­லைப்பு கும்­பல் சிக்­கி­யுள்­ளது.

வன­ஜா­வுக்கு ஏற்­கெ­னவே இரு மகள்­கள் உள்­ள­னர். இந்­நி­லை­யில் அவர் மீண்­டும் தாய்­மை­ அ­டைந்­தார். பெண் குழந்­தை­யாக இருப்­பின் கருக்­க­லைப்பு செய்­து­வி­ட­லாம் என்று தன் கண­வ­ரு­டன் பேசி முடிவு செய்­துள்­ளார் வனஜா.

இந்­நி­லை­யில் சட்­ட­வி­ரோத கருக்­க­லைப்பு கும்­பல் குறித்து வன­ஜா­வுக்குத் தெரி­ய­வந்­துள்­ளது. இடைத்­த­ர­கர் மூலம் அணு­கி­ய­போது குறிப்­பிட்ட ஒரு பரிசோதனை மையத்­திற்குச் செல்­லு­மாறு அவர் கூறி­யுள்­ளார்.

அங்கு பரி­சோ­தித்­த­தில் பெண் குழந்தை எனத் தெரி­ய­வந்­ததை அடுத்து, கருக்­க­லைப்­புக்குத் தயா­ரா­னார் வனஜா. அவரை உட­ன­டி­யாக அரு­கில் உள்ள வீட்­டுக்கு அழைத்­துச் சென்­றுள்­ள­னர். அப்­போது அவ­ரது கண்­கள் துணி­யால் கட்­டப்­பட்­டன.

கருக்­க­லைப்பு செய்த சில நாள்­க­ளுக்­குப் பின்­னர் வன­ஜா­வுக்குத் தொடர்ந்து வயிற்று வலி ஏற்­ப­டவே கிருஷ்­ண­கிரி அரசு மருத்­து­வ­ம­னைக்குச் சென்­றுள்­ளார். அங்கு பரி­சோ­தனை செய்­த­தில், கருக்­க­லைப்­பின்­போது சிசு­வின் தலையை மட்­டும் வெளியே எடுத்­தி­ருப்­ப­தும் பாதி உடல் கருப்­பை­யி­லேயே இருந்­த­தும் தெரி­ய­வந்­தது.

வனஜா கடும் அதிர்ச்சி அடைந்­தார். இதை­ய­டுத்து சிசு முழு­மை­யாக அகற்­றப்­பட்­டது.

இது­கு­றித்து மாவட்ட ஆட்­சி­யர்க்குத் தக­வல் தெரி­விக்­கப்­பட, அவ­ரது உத்­த­ர­வின் பேரில் காவல்­து­றை­யி­னர் தீவிர விசா­ரணை மேற்­கொண்­ட­னர்.

இதில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, கருக்­க­லைப்பு நட­வ­டிக்­கை­கள் அங்கு மேற்­கொள்­ளப்­பட்­டது உறு­தி­யா­னது. இது தொடர்­பாக 38 வய­தான கற்­ப­கம் என்ற தாதி­யர் உட்­பட ஏழு பேர் கைதா­கி­னர். இவ­ரைத் தவிர வேறு யாருக்­கும் மருத்­து­வத்­து­றை­யு­டன் எந்­த­விதத் தொடர்­பும் இல்லை.

இவர்­கள் தர்­ம­புரி, கிருஷ்­ண­கிரி, திருப்­பத்­தூர் உள்­ளிட்ட பல்­வேறு மாவட்­டங்­களில், வீடு வீடா­கச் சென்று கர்ப்­பிணிப் பெண்­க­ளுக்கு ஸ்கேன் செய்து சிசு­வின் பாலி­னத்தை தெரி­யப்­படுத்தி, குழந்தை பெற விரும்­பா­த­வர்­களுக்கு கருக்­கலைப்பு செய்­துள்­ளனர். இதற்­காக கணி­ச­மான தொகை வசூ­லித்­துள்­ள­னர்.

தமி­ழ­கத்­தில் சிசு­வின் பாலினத்தை தெரி­விப்­பது சட்­டப்­படி குற்­ற­மா­கும்.