திருவண்ணாமலை: திருவண்ணா மலையில் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற ரமண மகிரிஷி ஆசிரமத்தில் பெண் பக்தர்கள், பணியாளர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
கஞ்சா விற்பனை, பாலியல் வன்ெகாடுமை என மற்றொரு நித்தியானந்தா ஆசிரமமாக ரமணர் ஆசிரமம் உருவெடுத்து வருவதாகவும் கர்நாடகாவைச் சேர்ந்த சுனிதா திமே கௌடா என்ற பெண் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆசிரம நிர்வாகிகள் சிலர் கஞ்சா பயன்படுத்துவதோடு அதனை ஆசிரமத்துக்கு வருபவர் களுக்கு விற்பதாகவும் அவர் ஊடகத்துக்கு அளித்துள்ள நேர் காணலில் தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் ஏறக்குறைய 75 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது ஸ்ரீ ரமண மகிரிஷி ஆசிரமம். இந்த ஆசிரமத்துக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.
இதேேபால், பெங்களூர் பசவனகுடியைச் சேர்ந்த தொழிலதிபர் அஷோக் ஷங்கும் அவரது மனைவி சுனிதா திமே கௌடாவும் கடந்த 20 ஆண்டுகளாக பக்தர்களாக இங்கு வந்து செல்கின்றனர்.
ஆசிரம நிர்வாகிகள் வேண்டு கோளின்படி, பல லட்சம் ரூபாய் செலவில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், ஆசிரம ஊழிய ரும் காவலரும்கூட தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக சுனிதா குற்றம்சாட்டியுள்ளார்.
"பல பெண்கள் இதுபற்றி பேச பயப்படுகின்றனர். ஏனெனில் ஆசிரமத்தில் ரவுடிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. அதனால் குற்றச்செயல்கள் வெளியில் தெரியாமல் உள்ளன," என்றார்.
ஆசிரமத்தில் பாலியல் தொல்லைகளும் வன்கொடுமை சம்பவங்களும் அரங்கேறுவதை அடுத்து, ஆசிரம நிர்வாகிகள் சிவதாஸ் கிருஷ்ணன், ஜெயந்தி பிரேம்குமார், சத்தியமூர்த்தி, வெங்கட், பிரேம்குமார், ஜெயகுமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சுனிதா அளித்துள்ள புகா ரில் கேட்டுக்கொண்டுள்ளார்.
"ஒரு நேர்மையான பெண் காவல் அதிகாரியை நியமித்து விசாரணைகள் செய்தால் பல பாலியல் கொடுமைகள் வெளிச்சத்துக்கு வரும்," என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், சுனிதாவின் புகார் குறித்து திருவண்ணாமலை நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக நியூஸ் தமிழ் தொலைக்காட்சி தகவல் தெரிவித்துள்ளது.

