சென்னை: தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சியில் கணக்கு வைத்திருப்பவர்கள் கடந்த ஞாயிறன்று பெரும் கோடீஸ்வரர்களாக சற்று நேரத்துக்கு மகிழ்ச்சி ெவள்ளத்தில் மிதந்தனர்.
சென்னை தியாகராய நகரில் உள்ள எச்டிஎஃப்சி வங்கி தனது வாடிக்கையாளர்கள் 100 பேரின் வங்கிக் கணக்கில் தலா 13 கோடி ரூபாய் என மொத்தம் 1,300 கோடி ரூபாய் வரவு வைத்துள்ளதாக குறுஞ்செய்தி அனுப்பியது.
இதைக்கண்டு வாடிக்கையா ளர்கள் பலரும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
இதேபோல், இன்னும் பல வாடிக் கையாளர்களின் கணக்கிலும் ரூ.10,000 முதல் லட்சம் ரூபாய் வரை வரவு வைத்துள்ளதாகவும் குறுஞ்செய்திகள் வந்தன.
இதையறிந்த வங்கி நிர்வாக அதிகாரிகள், உடனடியாக பணம் போடப்பட்ட வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கை தற்காலிகமாக முடக்கி விசாரணை நடத்தினர்.
அப்போது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பணம் தவறுதலாக வரவு வைக்கப்பட்டது தெரியவந்தது. வங்கி சர்வரில் புதிய மென்பொருளை நிறுவியதே குளறுபடிக்கு காரணம் எனவும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
ஹெச்டிஎப்ஃசி வங்கியின் பெசன்ட் நகர் கிளையில் கணக்கு வைத்திருக்கும் வி சஞ்சீவி என்பவர், அவரது வங்கிக் கணக்கில் திடீரென ரூ.3.1 கோடி டெபாசிட் செய்யப்பட்டதாக பகிர்ந்திருந்தார். பின்னர், அவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு சீரானதாகக் குறிப்பிட்டார். இந்நிலையில், ஞாயிறன்று முடக்கப்பட்ட ஒரு சிலரது வங்கிக் கணக்குகள் நேற்று விடுவிக்கப்பட்டதாக வங்கி நிர்வாகம் கூறியது.