கோவை: கோவை மாவட்டத்தில் முதல்முறையாக ஒரு குழந்தைக்கு சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
கோவை, கே.கே.புதூர் பகுதி யைச் சேர்ந்தவர் நரேஷ் கார்த்திக், 33. இவர் தனது மூன்றரை வயது மகளை எல்கேஜி வகுப்பில் சேர்ப்பதற்காகப் பல்வேறு பள்ளிகளையும் நாடினார். ஆனால், விண்ணப்பத்தில் சாதி மதம் குறிப்பிடாததால் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டனர்.
இதுகுறித்து நரேஷ் கூறியபோது, "பெற்றோர் தங்களது குழந் தைகளின் சாதி, மதம் குறித்து குறிப்பிடத் தேவையில்லை என 1973ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பல பள்ளிகளுக்கும் தெரியாமல் இருப்பதுதான் வேதனைக்குரிய விஷயம். கோவை ஆட்சியரை தொடர்புகொண்ட பின்னரே குழந்தைக்கு சான்றிதழ் கிடைத்துள்ளது. எனது குழந்தைக்கு வருங்காலத்தில் சாதி ரீதியான இடஒதுக்கீடு உள்ளிட்ட எந்த சலுகையும் கேட்கமாட்டேன்," என உறுதி அளித்துள்ளேன்.
"புதிய நடைமுறை என்பதால் சான்றிதழ் கிடைக்க காலதாமதம் ஏற்பட்டது. இனிமேல் இந்தச் சான்றிதழ் எளிதில் கிடைக்கும்," என்று அவர் கூறினார்.

